தமிழ் விக்கி- தூரன் விருது, விருந்தினர் சுவாமி பிரம்மானந்தர்

தமிழ் விக்கி- தூரன் விருது வழங்கும் விழா 14- ஆகஸ்ட்- 2022 அன்று காலைமுதல் இரவு வரை ஈரோட்டில் நிகழ்கிறது. (முந்தையநாளே வந்து தங்க விரும்புபவர்களுக்கு இடவசதி உண்டு). இதில் ஆய்வாளர்களை வாசகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி அமைகிறது. இந்நிகழ்வு ஆய்வுலகில் என்ன நிகழ்கிறது என்பதை பொதுவாசகர்கள் உணர்வதற்கான அரங்கு.

அரங்கில் சிறப்பு விருந்தினரான சுவாமி பிரம்மானந்தர் கலந்துகொள்கிறார். மலேசியாவைச் சேர்ந்தவரான சுவாமி பிரம்மானந்தர் தயானந்த சரஸ்வதியின் மாணவர். சிவானந்தர் வழிவந்த அத்வைதி. நவீன இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். மலேசியாவில் அவர் தமிழ்ப்பண்பாட்டுக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் மதங்களைக் கடந்த ஒரு மையமென திகழ்பவர். கூலிம் நகரில் அவருடைய ஆசிரமத்தில் நவீன இலக்கியச் சந்திப்புகள் பல நடைபெற்றுள்ளன. சுவாமி பிரம்மானந்தரை வாசகர்கள் சந்திக்கும் உரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

கூலிம் நவீன இலக்கியக் களம்

முந்தைய கட்டுரைசோழநாட்டில் கரிசலா?
அடுத்த கட்டுரைஅலக்ஸாண்டர் துப்யான்ஸ்கியும் தொல்காப்பியமும்