Stories of the True- ஒரு பேட்டி

Stories of the True : Translated from the Tamil by Priyamvada

அறம் தொகுதியின் ஆங்கிலமொழியாக்கமான Stories of the True வெளியாகியிருக்கிறது. அதையொட்டி பிரிண்ட் இதழில் வெளியான என் பேட்டியுடன் ஒரு ஸூம் உரையாடலும் வெளியாகியிருக்கிறது. இந்த பேட்டிகள் உரையாடல்கள் எல்லாமே நூலை நோக்கிய கவனத்தை ஈர்ப்பதற்காகவே. இந்த விவாதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வரும் விவாதங்கள் சமூக ஊடக நுரைகள். நூலை ஒட்டி மதிப்பீடும் விவாதமும் எழுமென்றால்தான் அவற்றுக்குச் சொல்மதிப்பு.

சென்ற காலங்களில் நூலுக்கு இத்தனை விளம்பரங்கள் தேவைப்படவில்லை. ஆனால் இன்று அப்படி அல்ல. இன்று சந்தையில் நூல்கள் குவிகின்றன. விளைவாக கவனம் மெலிந்துகொண்டிருக்கிறது. வாசகர்களின் உதாசீனம் பெருகுந்தோறும் விளம்பரம் கூடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் அதற்குரியவை. இன்னும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பதிப்பகத்தார் சொல்லும் இலக்கிய மாநாடுகளுக்கெல்லாம் சென்றே ஆகவேண்டும் என்று கேள்விப்பட்டேன். பார்ப்போம்  

Over 300 books, 2 rebirths later, iconic Tamil author Jeyamohan says translations are strange


https://tamil.wiki/wiki/Jeyamohan

முந்தைய கட்டுரைஅலக்ஸாண்டர் துப்யான்ஸ்கியும் தொல்காப்பியமும்
அடுத்த கட்டுரைகொங்கு அறிஞர்கள்