காலத்தை மீறிய படைப்புகள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் எதுவென்றால், அப்படைப்புகளின் வாசகர்களும் எதிர்வினைகளும் இருப்பது எதிர்காலத்தில் என்பதே. பாரதியை, புதுமைபித்தனை புரிந்து கொள்ள நம் சமூகத்திற்கு குறைந்தபட்சம் நூறு ஆண்டுகளாவது தேவைப்படுகிறது. பேரிலக்கியத்தை படைத்துவிட்டு காத்திருக்கும் படைப்பாளியின் நிலையென்பது, அடைகாக்கும் ஒரு பறவையை போன்றதே. சில சமயங்களில் படைப்பாளி மறைந்த பின்னரும் கூட, ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் தன்னுள் ஒளித்து வைத்தபடி படைப்புகள் நீண்டதொரு காலவெளியில் நீந்தியபடி காத்திருக்கின்றது