தேசிகவினாயகம் பிள்ளை வரலாற்றை அணுகி ஆராய ஆராய நாஞ்சில்நாடனின் கும்பமுனிதான் ஞாபகத்துக்கு வருகிறார். அந்தக் குசும்பும் புலமையும் அவருடைய இயல்புகள்தான். அவரை குழந்தைக்கவிஞர் என்றே இன்று அறிந்திருக்கிறோம். தமிழகக் கல்வெட்டாய்வின் முன்னோடிகளில் ஒருவர் அவர் என்பதை அறிந்தவர் சிலரே
