நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை ஓர் இலக்கியவாதியாக இன்று நினைவுகூரப்படுவதில்லை. அவருடைய ஒரு கவிதையேனும் எங்கும் எவராலும் மேற்கோள் காட்டப்படுவதில்லை. ஒருவேளை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் அவருக்கும் பாரதிதாசன் போல ஒரு பல்கலைகழகம் அமைந்திருக்கலாம். ஆனால் இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கே அவரைத் தெரியாது.
பாரதிதாசன் பரம்பரை போல நாமக்கல் கவிஞர் மரபு என்று ஒன்று தமிழ்க் கவிதையில் உண்டு. பாரதிக்குப்பின் வந்த மரபுக்கவிதை இயக்கங்கள் இரண்டு. ஒன்று நாமக்கல் கவிஞர் மரபு. அம்மரபில் ஏராளமான கவிஞர்கள் உண்டு. பலர் இன்று நினைக்கப்படுவதில்லை
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
