தமிழக நாட்டுப்புற தெய்வங்களில் காவல்தெய்வங்கள் உண்டு. குலதெய்வங்கள் உண்டு. குடும்ப தெய்வங்கள் உண்டு. அவற்றை விரிவாக ஆவணப்படுத்தி சீராகத் தொகுத்தால் உருவாகும் வரலாற்றுச் சித்திரம் மிகப்பிரம்மாண்டமானதாக இருக்கும். இதுவரை எழுதப்பட்ட வரலாறு கைக்குழந்தையாக அதன் ஒக்கலில் அமர்ந்திருக்கும்.
இது காடையூர் வெள்ளையம்மாள் கதை. இதைப்போல ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வக்கதைகளை எழுதி அனுப்பலாம்.நூல்களைச் சார்ந்து, ஆதாரங்களுடன்.
காடையூர் வெள்ளையம்மாள்
