அஜிதனின் இச்சிறுநாவல், முழுவதும் தன்னை இனிமையால் நிறைத்து அதில் திளைக்க வைப்பது. துளியின் பூரணத்தை உணரச்செய்வது. பெருநாவல்களின் வீச்சும் ஆற்றலும் இதில் இல்லை. ஆகவே, அதன் பெருமூச்சுகளும், வீழ்ச்சியின் சரிவுகளும் இதில் இல்லை.
மாறாக, மொத்த உலகையும் நிறைக்கத் துடிக்கும் ஏதோ ஒன்றின் இனிய தவிப்பு மட்டுமே பக்கங்கள்தோறும் நிறைந்திருக்கிறது.