நாகை புத்தகக் கண்காட்சி

 

அன்புடன் ஆசிரியருக்கு,

நாகப்பட்டினத்தில் ஜூன் 24 தொடங்க ஜூலை நான்குவரை‌ புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. உண்மையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌. நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாசகர்களை முக்கியமான புத்தக அரங்குகளில் காண முடிந்தது.‌ சாகித்ய அகாடமி, தமிழ்நாடு பாடநூல் கழகம்,கிழக்கு, காலச்சுவடு என பல முக்கியமான பதிப்பகங்களில் ஸ்டால்கள் உள்ளன. மொத்தம் 115 ஸ்டால்கள்.

முக்கியமான எழுத்தாளர்கள் அழைக்கப்படாதது ஒரு குறைதான். ஆனால் இந்த ஒரு குறைபாட்டைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த நூற்காட்சி ஏற்பாடுகள் நிறைவு தருகின்றன. (இந்த கடிதத்தை தளத்தையும் படங்களையும் தளத்தில் வெளியிட்டால் நாகையைச்சுற்றி உள்ள வாசகர்கள் பயனடைவார்கள்)

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

இடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்

முந்தைய கட்டுரைகரசூர் பத்மபாரதி – கடிதம்
அடுத்த கட்டுரைமா.கிருஷ்ணன், அவருடைய முன்னோடிகள்