தமிழகத்தில் புனருத்தாரணம் என்ற பேரில் பழமை வாய்ந்த கோயில்களில் மணல் வீச்சு முறைப் படி சிற்பங்களை ‘சுத்தம் செய்’கிறது அரசு. விளைவாக அரிய சிற்பங்கள் சிதைந்து மூளியாகி விடுகின்றன. தமிழகத்தின் மகத்தான சிற்பங்களில் கணிசமானவை ஏற்கனவே மூளியாக்கப் பட்டு விட்டன.
மணல் வீச்சு முறை என்பது சிற்பங்களைச் சுத்தம் செய்வதற்குரிய வழியே அல்ல. கப்பல்களின் அடியில் உள்ள சிப்பி, பவளக் கசடுகளை நீக்குவதற்காக உருவாக்கப் பட்டது. அதை வைத்து சிற்பங்களை சுரண்டலாம் என்று ஏதோ சும்பனுக்கு தமிழகத்தில் ஞானோதயம் வந்தது. மொத்த கோயில்களையும் அழிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதைப்பற்றி நெடுங்காலமாக எழுதி வந்திருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் சட்டபூர்வமாக அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நண்பர் ரீச் சந்திரசேகரன் எழுதிய கடிதம்
அன்புள்ள அன்பர் ஜெயமோகனுக்கு,
’ரீச்’ சந்திரசேகரன்.
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners
மணல் வீச்சு முறை நீதிமன்றத்தாலேயே தடைசெய்யப் பட்டிருக்கிறது. அதற்கான சான்றுகளும் இந்த அமைப்பு கைவசம் வைத்திருக்கிறது. பார்க்க http://maraboorjc.blogspot.com/2011/04/sand-blasting.html
இந்த அமைப்பின் தொடர் நடவடிக்கைகளில் நண்பர்கள் பங்கெடுக்கவேண்டுமென விரும்புகிறேன்
ஜெ
சிற்பப் படுகொலைகள்…
சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்
சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்
ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை