எம்.வேதசகாயகுமாருக்கு அவர் தமிழ்ச்சிறுகதைகள் பற்றி எழுதியதுபோலவே இலங்கை சிறுகதைகள் பற்றி கறாரான அழகியல் விமர்சனநூல் ஒன்றை எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. “இலங்கையின் இலக்கிய வரலாற்றை எங்கே வேண்டுமென்றாலும் தொடங்கலாம். இலக்கியக்கலையின் வரலாற்றை இலங்கையர்கோனில் இருந்து தொடங்கவேண்டும்” என்று அவர் சொல்வதுண்டு
