மு.க- கடிதம்

ஹாய் ஜெயமோகன்,

மு.க. பற்றிய உங்கள் கட்டுரை வாசித்தேன்.

ஒரு சிறிய உள்ளீடு. கலைஞர் மறைந்த போது அவருக்கு ஒரு சிறப்பிதழ் கொண்டு வந்தேன் (தமிழ் மின்னிதழில்). அதில் அரசியல் பற்றி ஏதும் பேசாமல் கலைஞரை ஓர் எழுத்தாளராக மட்டும் அணுகி அவரது பல்வேறு விதமான எழுத்துப் பங்களிப்புகளை முன்வைத்துப் பேசிய பன்முகக் கட்டுரைகளின் தொகுப்பாக அச்சிறப்பிதழ் அமைந்தது. அப்படி ஏதும் இது வரை எழுதப்படவில்லை என்ற பொருளில் நீங்கள் கட்டுரையில் குறித்திருந்ததால் இதைப் பகிர்கிறேன். (இதழ் வெளியான போது வழமை போல் உங்களுக்கு லிங்க் அனுப்பியிருந்தேன் என நினைவு.)

இந்த இணைப்பில் தரவிறக்கிப் படிக்கவேண்டும்

https://tamizmagazine.blogspot.com/2018/09/2018.html

முந்தைய கட்டுரைஎம்.வேதசகாய குமார் படத்திறப்பு
அடுத்த கட்டுரைமலைக்காட்டுசாரம் நாறும் பூ