அம்மாவின் திருமணம்

இவ்வாண்டு நான் செல்லவேண்டும் என எண்ணியிருந்த திருவிழா இது. பல நண்பர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கோவிட் காரணமாக மூன்றாண்டுகளாக நடைபெறவில்லை. குமரித்துறைவி அமர்ந்த கோயில், ஆரல்வாய் மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் பங்குனித் திருவிழா. பழைய கதைகளின் படி இங்கே பங்குனியில் திருமணம். கிளம்பிச் சென்று மதுரையில் சித்திரையில் மீண்டும் திருமணம். இங்கே நடந்தது அசல், அங்கே நடப்பது மீண்டும் மகாராஜாவுக்காக நடந்த திருமணம். அங்கே திருமணம் நடக்கும்போது இங்கே மீண்டும் திருவிழா உண்டு.

20 ஆம் தேதிவரை திருவிழா நடைபெறுகிறது. 16 அல்லது 17 ஆம் தேதிகளில் சென்று வரவேண்டும் என எண்ணுகிறேன். இவ்வாண்டு மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கும் செல்லவேண்டும்.குமரித்துறைவி எப்போதோ நெஞ்சில் விழுந்த விதை. இப்போது தேவி அன்னை அல்ல மகள். போய்த்தான் ஆகவேண்டும்.

v[email protected]

https://www.vishnupurampublications.com/

முந்தைய கட்டுரைஉ.வே.சா போற்றுதலுக்குரியவரா?
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை வழக்கு, சில நடைமுறைகள் சில வினாக்கள்