2010 முதல் 2016-ம் ஆண்டு வரை நிகழ்ந்த தேசியப் பங்குச் சந்தை முறைகேடுகளை விசாரித்த இந்தியப் பங்குச் சந்தை வாரியம் – செபி (Securities and Exchange Board of India), சமீபத்தில் தன் அறிக்கைகளைச் சமர்ப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, மத்தியப் புலனாய்வுத் துறை, தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா, குழுமச் செயல் அலுவலர் ஆனந்த் சுப்ரமணியம், தேசியப் பங்குச் சந்தையின் முதல் மேலாண் இயக்குநர் ரவி நாரயண் மூவரையும் தேடப்படும் நபர்களாக அறிவித்தது.