இயற்கையின் ஆசீர்வாதங்கள் -நாராயணன் மெய்யப்பன்

வணக்கம். நலம். நலமே விழைக என்று பிராத்திக்கின்றேன்.

மதுரையில் சித்திரை பிலவ வருட தொடக்க நிகழ்ச்சி அளித்த உற்சாகம் ஊக்கம் பெற்று சிறய முயற்சிகள் எடுத்திருந்தாலும் தன்னியல்பாக நடைபெற்ற சில மாற்றங்கள் மனதிற்கு அமைதி அளித்தது குறிப்பாக தோட்டத்தில் ஒரு வேளான் குடி வாய்க்கப்பெற்றது. இந்த வருடம் தை பூசத்திற்கு முன்பாக மார்கழி பூசத்தை கணக்கிட்டு பழனி பாதயாத்திரை முழுதாக நிறைவுற்றது என்பது மிக நிறைவான ஒன்று. காரணம், தை பூசத்தின் நிகழ்வுகள் எந்த வித முன் எச்சரிக்கையும், ஒழுங்குபடுத்தப்பட்டிருக்க வேண்டியதும், எந்த மேன்மையும் இல்லாமல் நடைபெற்ற நிகழ்வு.

2016 கார்த்திகை தொடங்கி ஒருங்கிணைந்த பண்ணை முறையில் சில கோணங்களில் படி படியாக தொடர்ந்து நிதானமான வேகத்தில் முன் செல்கிறோம். இந்த வருடம் 2022 தை பொங்கலும், நெல் அறுவடையும் மனதிற்கு மிக அனுக்கமானது, மன நிறைவால். இன்றைய சூழலுக்கு ஏற்ப ஒரு கூட்டுறவு ஏற்பாட்டை பரிசோதனை முறையில் செயல்படுத்தி அதன் படி நாகு அண்ணண் மற்றும் குடும்பத்தார்கள் தோட்டத்தில் வசிக்கிறார்கள். அவர்களுடன் கொண்டாடிய மாட்டு பொங்கல் மிக மிக நிறைவான நாள். அலங்கரிக்கப்பட்ட காளைகள், உலாவும் ஆடுகள் அதிலும் ஆட்டுக்குட்டிகள் அதனுடன் குழந்தைகள் விளையாடும் நிமிடங்கள், இரு நாய்கள், சில பறவை சப்தங்கள், மரங்கள், பயிர், நாகு அண்ணண் குடும்பத்தார்கள் முழு ஈடுபாடு, என் பெற்றோர்கள், மனைவி மக்கள் என்று கரைந்துகொண்டே இருந்தேன் நான் இல்லாமல் ஆகும் தருணங்கள். பற்றற்ற பற்றை நோக்கி செயலில் கரைந்து நான் இல்லாமலே அகும் காலம் விரைந்து வர வேண்டிக்கொண்டேன்.

இந்த கூட்டுறவு முறையில் முதல் அறுவடை இது. அம்பாசமுத்திரம் 16 பலகார அரிசி இயற்கை முறையில் விளைவிக்கப்பெற்று அறுவடை அகியுள்ளது. ஒன்றுக்கு சற்று கூடுதலான ஏக்கரில் 20 மூட்டை அறுவடையாகியுள்ளது, கால் ஏக்கருக்கும் குறைவான செய்யில் கருப்புகவனி விளைவிக்கப்பெற்று 1 மூட்டை அறுவடையாகியுள்ளது. 2018 முதல் அறுவடை கொள்ளு 150 கி அதற்கு பிறகான அனைத்து முயற்சியும் எள்ளளவு பலன் தான் (ஒரு முறை நெல் அரை ஏக்கருக்கு 5 மூட்டை, உளுந்து 100 கி, ஒரு முறை பட்டம் தவறி பயிர் செய்து விளைந்த பின்னும் முற்றிலும் அறுவடை செய்ய முடியாமல் போனது) புத்திக்கொள்முதல் மட்டுமே. அங்கிருந்து இன்றைய நிலை என்பது நினைக்க நினைக்க நிறைவான இடம். அறுவடை ஆன பிறகு தந்தை படத்தை அனுப்பியதும் பார்த்த கணம் மனம் ஒன்றி ‘அரோகரா! அரோகரா!’ என்று கூக்குரலிட்டது. சரணாகதி தான் வேறு என்ன செய்யமுடியும்? ஐம்பூதங்களின் ஆற்றலையும் பின்னி பூமாலை செய்து படைக்கலாம் அந்த நம்பிக்கைக்கு அற்புதங்கள் நிகழ்ந்தால் இயற்கையின் கருனை அது.

இன்னல்கள் இல்லாமல் ஒரு அசைவும் கிடையாது ஆனால் அவை இயல்பானது கடக்கவேண்டும் என்ற மனநிலை மிக அவசியமானது. இந்த முறை தொடர் மழை கால்நடைகளுக்கு ஏற்ற நிலை இல்லை ஆகையால் அவற்றை நாகு அண்ணணின் ஊருக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஆக தினமும் ஊரிலிருந்து வந்த போக வேண்டும் அந்த இடைப்பட்ட நேரத்தில் மயில் கூட்டம் பயிர்களை சூரையாடும், களை மேலான்மையும் சாத்தியமற்று போயிற்று, கடைசி நேரத்தில் ஒரு வித பதற்றம் இதற்கு மேல் மழை வந்திட்டா என்று! ஒரு வழியாக அறுவடை நாளை குறித்து அதற்கு தயாரானதும் அடுத்த விசயம், 5 ஆண்டுகள் முன்ப கேட்ட விவசாய மின்சாரம் (4 ரூ) 2020 பின் மாதங்களில் கிடைத்தது,10 அடி வழியில் 1.1/2 அடியில் மின் கம்பங்களை ஊன்றிவிட்டார்கள் அறுவடை இயந்திரம் வர வழியில்லை. முன் தோட்டத்தில் பேசி வழி வகை செய்து இந்த ஆண்டு அறுவடை முடிந்தது இதற்கான நிரந்திர வழி செய்ய வேண்டும்.

3 வயதிற்கு மேலான தென்னங்கன்றுகள் தூர் கட்டாததால் அதற்கு மண் அனைத்து வேலை செய்து முடித்தோம். இந்த ஆண்டு மழையில் சேதம் தென்னைக்கு தான் அதிகம். வடிகால் திறன்பட இருத்தல் வேண்டும் இதற்கு சாத்தியமற்ற நிலை சொட்டு நீர் பாசன வசதிகள் செய்திருந்தபடியால், ஆக பொறுத்திருந்து வழி செய்ய வேண்டும் அதற்குள் பிழைக்கவில்லை என்றால் மாற்ற தான் வேண்டும். வடிகால் வசதியற்ற இடங்களில் ஒரே வழி, மழை காலம் முடிந்த கையாடு கன்று வைப்பது தான்!

கன்றுகள் நட்டதில் 60% மேல் மரங்கள் ஆகிற்று, ஆம் கன்றுகள் காடாகிக்கொண்டிருக்கிறது. தொடக்கதில் அதிகம் இருந்தாலும் வேர் கரையான் பாதிப்பினால் குறைந்திருக்கிறது அதற்கு வழி பார்க்கவேண்டும். காடு எங்களை ஆசீர்வதித்தது முதல் பலனாக நெல்லி கனி கொடுத்து. ஊரில் உறவினர்களுக்கு கனிகள் கொடுத்து மகிழ்ந்தோம் ஏகாதசி விரதத்திற்கு அத்துடன் பல முயற்சிகள் யூடிப் வாயிலாக தேன் நெல்லி, நெல்லி ஊருகாய், நெல்லி தொக்கு என்று. என்ன செய்தோம் என்று இந்த கொடை எங்களுக்கு என்று நெல்லி கனியை சுவைத்த போது மனம் வினவியது.

இதே நேரத்தில், விஷ்ணுபுர நண்பர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம் வேளான் நிலை பற்றி பேசியும், நிலையை விசாரித்தும், ஊக்கம் அளித்தும், தேவைப்படும் நேரத்தில் தொடர்புகள் ஏற்படுத்தி உதவியும், உரிமையோடு பொருளாதார பின்னடைவை கவனிக்க சொல்லும் அவர்கள் அனைவருக்கும் என் நிலையை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். புத்திக்கொள்முதலை பயண்பாட்டிற்கு கொண்டுவருகிறோம் அதன் ஒரு சாரம் கூட்டுறவு முயற்சி நம் நோக்கம் என்ன என்று தெரிந்து அதில் அவர்களுக்கு சாதகம் இருக்கும் என்று நம்பும் மக்கள் காணக்கிடைக்கிறார்கள், இந்த முறை மரபான நெல் அது இது என்று இல்லாமல் அந்த வட்டாரத்தில் எது இருக்கிறதோ அதைய பயிர் செய்தோம், அடுத்ததாக இயற்கை தொழுவுரங்களை வெளியில் இருந்து வாங்குவதை குறைத்து தோட்டத்து கால்நடை உரங்களே பயண்படுத்தினொம், கட்டாயம் களை எடுப்போம் என்றில்லாமல் நேரம் தப்பியிருந்ததாலும் கூலிக்கு கட்டாது என்பதாலும் களையை களையவில்லை, முன் எப்பொதும் இருந்த செலவைவிட குறைவு தான். தொடர்ந்து செயல்படுகிறோம் சிறிது சிறிது என்றாலும் முன் செல்கிறோம் காலம் மனம் இறங்கி எங்களை ஏற்றுக்கொள்ளும் வரை. அக்கரை கொண்ட அன்பை பரிமாறும் நண்பர்கள், பெரியவர்கள், சான்றோர்கள் ஆசீர்வாதங்கள் தான் நம்மை வழிநடத்தும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. ஆகவே கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கான தனி கட்டுரையும் அதன் தோட்டத்தின் படங்களை பதிவிட்டு தெரியபடுத்துகிறேன்.

ஒரு ஆவலும் உண்டு, விஷ்ணுபுரம் பொருளாதார விவாத வட்டம் அமைய பெற்று விவாதிப்பது. மின்னஞ்சல் குழுமத்தில் சில உரையாடல் நடந்தது பாலா அண்ணணுடன் அவர்களை கண்ணண் தண்டபானி அவர்கள் ஒருங்கிணைத்த ஒரு நிகர்நிலை காந்தி நிகழ்ச்சியில் கலந்து சில கேள்விகள் கேட்டதுண்டு அவற்றை தொடர்ந்து, இந்த ஆர்வம் சாரந்த அனைவரும் குழுவாகவிவாதிப்பது. சில சாத்தியங்களை வாய்ப்புகளை பொருளாதாரம் கடந்து இன்றைய சூழலில் குவிந்து கிடக்கும் இயற்கை பற்றிய தகவல் மற்றும் தொடர்ந்து கவனிக்கப்படும் நிகழ்வுகளின் தரவுகள் கொண்டு எப்படி ஆக்கபூர்வமான முடிவுகளை எட்டிபிடிக்க பயண்படுத்தலாம் என்று.

நிறைவாக, உங்களுடனான நேரடி உரையாடலில் நீங்கள் எடுத்துரைத்த சொற்களை மீண்டும் மீண்டும் நினைவுபடித்திக்கொள்கிறேன் ‘பஞ்ச பூதங்களுடன் வேலை செய்கிறோம் என்ற எண்ணம் அவசியம்…’ பிரபஞ்சம் நமக்கு தந்துக்கொண்டே இருக்கிறது காட்டிக்கொண்டே இருக்கிறது அதை உணரும் காலம் தான் தேடுதல் நமக்கு அளிக்கும் விடுதலை.

பாலபாடம் சிறு குறிப்புகளாக ஒழுங்குபடுத்தலாம் என்று தொன்றுகிறது;

– வேளான் நிலம் கண்ணில் பட வேண்டும், தினம் தினம் பார்வையிடும்படி. நாம் அங்கு இருக்கவேண்டும் அல்ல ஒரு வேளான் குடி இருக்க வேண்டும், குறைந்தது காவல் குடி. இல்லையேன்றால் எத்தனை காலம் வேண்டுமானாலும் பொறுமையாக இருங்கள் தயாரானதும் செயல்படுங்கள்.

– வேளான்மையில் உணவு பிரதானம் என்றிருத்தல் சிறப்பு (லாபம் நஷ்டம் என்பதையேல்லாம் கடந்து). வேளான் பின்புலம் இல்லாதோர் ஒரு போதும் தன் பணியை தொழிலை விட்டு முழு நேரம் வரவேண்டாம். எனக்கு அறிவுரித்தைய கடைபிடித்தேன் ஆகையால் அனுபவித்து பதிவிடுகிறேன்.

– ஆர்வம் மிக்கவர் என்றால் மாடி தோட்டம், குறுகிய இடத்தில் முயற்சி என்று தொடங்கலாம். ஒரு செடி ஒரு மரம் வளர்த்து அதில் அடையும் திருப்தி உங்களுக்கு இதை பெரியதாக செய்ய வேண்டுமா என்பதை அடையாளம் காட்டும்.

– கால்நடை இல்லாத இயற்கை வேளான்மை பொருள் விரையம்.

– புதிதாக வேளான் நிலம்/தோட்டம் வாங்குவதாயிருந்தால் பல விசயங்கிளில், முக்கியமாக – மின்சார வசதி இருந்தால் சால சிறப்பு!

– புதிய விவசாய மானிய மின் இணைப்பு என்றால்(எந்த சலுகைகலும் இல்லாத வகையில்) – இணைப்பு கேட்ட பின், அதன் அடிப்படையில் விவசாய விலை (ரூ.4) இணைப்பு கோர வேண்டும் உடனடி இணைப்பிற்கு. அதன் வேகத்தில் தான் நடக்கும் முக்கியமாக அருகில் 100 ஆடியில் மின் கம்பம் இருந்தால் தான் அதுவும் நடக்கும்.

– எந்த ஒரு வேலையும் கேட்பது போல படிப்பது போல அது ஒன்றாக மட்டும் இருப்பதில்லை, அதனினுள் பல படிகளாக வேலைகள் இருக்கும், நெருங்கையில் தான் தெரியும், ஆக தயாராகயிருக்கவேண்டும்.

– சிறு விவசாயி – அங்கே சில ‘க்’குள் பாசனவசதியற்ற புஞ்சை (பாசன வசதியிருந்தால் 2.5 ஏக்கர்), தனி நபருக்கு 5 ஏக்கர் குறைவாக இருத்தல் வேண்டும், குடும்பத்தில் வெறு யாருக்கும் நிலம் இருக்ககூடாது.

– எல்.ஈ.டி விளக்குகள் பூச்சிகளை, வண்டுகளை விரைவாக ஈர்கிறது அதனால் கவனம் தேவை

நன்றி!

நாராயணன் மெய்யப்பன்

தை அறுவடை

புரட்டாசி பட்டம்

என்ன வேண்டும் ? வலிமை வேண்டும்!

ஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்

கன்றுகள் காடாகவேண்டும்!

இயற்கைவேளாண்மை -கடிதம்

முந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு கடிதம்
அடுத்த கட்டுரைதே- ஓர் இலையின் வரலாறு- வெளியீடு