வரலாறு ,அறிவியல் ,அரசியல், தொன்மம் , மானுடவியல். என அனைத்தையும் அறிந்த ஒரு அறிஞர், இந்த மானுடகுலம் முழுவதையும்,கணித்து, தன் சொற்களால் கோர்த்து சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்? என்பதற்கு பதில் தான் யுவால் நோவா ஹராரி. அவர் குறிக்களம் வரைந்து, மிக நேர்த்தியாக சோளிகளை உருட்டி, முக்காலத்தையும் தன் சொற்களால் திரட்டி அளித்தது தான் அவருடைய மூன்று நூல்கள். ‘யுவால் ட்ரியாலஜி’ எனலாம்.