விண்மீன்கள் நிறைந்த இரவு-நித்யா

மயிர் இணைய இதழ்

இந்த உலகத்தில் போட்டியுணர்வை உருவாக்கி நிறைத்துள்ள நம்மால், அச்சமூட்டும் அவசரங்களுக்கு நடுவில் மரத்தைச் சுற்றியுள்ள கொடியின் ஒவ்வொரு இலையையும் கொடியில் மலர்ந்துள்ள அழகிய மலர்களையும் கவனிக்க முடிவதில்லை. ஆனால், சலிப்பும் போட்டியுணர்வும் நிறைந்த ஒளிகுன்றிய அன்றாடத்தின் அழகின்மையானது, உலகத்தின் அழகாலும் மென்மையினாலும் நெகிழ்வாலும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையாலுமே நிகர் செய்யப்படுகிறது. மிகவயதான மரங்களின் கிளைநுனிகளில்கூட புதிய முளைகள் எழுவது, வசந்தத்தில் வளம் கொள்ளாது இருக்குமளவிற்கு மரத்திற்கு இன்னும் வயதாகவில்லை என்பதை நமக்கு உணர்த்தவே.

விண்மீன்கள் நிறைந்த இரவு

முந்தைய கட்டுரைஇரவு- மஞ்சுநாத்
அடுத்த கட்டுரைபோரும் அமைதியும் மொழியாக்கங்கள்