விஷ்ணுபுரம் விழா- வருக!

Vishnupuram Award Function Invitation -English

2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 25, 26 ஆம் தேதிகளில் கோவையில் இவ்விழா நிகழ்கிறது. ரூ இரண்டு லட்சமும் சிற்பமும் அடங்கியது இவ்விருது.

விழாவில் விக்ரமாதித்யன் பற்றிய ’விக்ரமாதித்யன் – நாடோடியின் கால்த்தடம்’ என்னும் விமர்சனத் தொகுதி நூல் வெளியிடப்படுகிறது. விக்ரமாதித்யன் பற்றி கவிஞர் ஆனந்த்குமார் இயக்கிய ஆவணப்படம் ’வீடும் வீதிகளும்’ திரையிடப்படும்.

25 ஆம் தேதி காலை 9 மணி முதல் விஷ்ணுபுரம் விருந்தினர்களாகிய எழுத்தாளர்களுடன் வாசகர்கள் உரையாடும் வாசகர் சந்திப்புகள் நிகழும். 26 காலை 9 மணி முதல் சிறப்பு விருந்தினர்களுடனான உரையாடல்கள்.

26 மாலை ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். விருது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக

ஜெய்ராம் ரமேஷ் [ பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர், இலக்கிய ஆய்வாளர், சூழியல் ஆய்வாளர்]

சின்ன வீரபத்ருடு [தெலுங்கு கவிஞர், இலக்கிய விமர்சகர்]

வசந்த் சாய் [திரை இயக்குநர்]

சோ.தர்மன் [ சாகித்ய அக்காதமி விருது பெற்ற படைப்பாளி ]

ஜெயமோகன் [எழுத்தாளர்]

ஆகியோர் கலந்துகொள்வார்கள். கவிஞர் விக்ரமாதித்யன் ஏற்புரை வழங்குவார்

அனைவரும் வருக

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

vikramadhityan wiki page

 

 

 

முந்தைய கட்டுரைகாலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-4, ஜெயமோகன்
அடுத்த கட்டுரைகிசுகிசுப்பின் இனிமை- கடலூர் சீனு