விஷ்ணுபுரம் விருது, கடந்த ஆண்டு…

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு சென்ற 2020க்க்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் விருதுகளிலேயே கொண்டாட்டம் இல்லாமல் நிகழ்ந்தது இதுதான். கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாகவே கடைப்பிடிக்கப்பட்டன. மதுரையில் ஒரு ஓட்டல் அறையிலேயே விருதுவிழா. ஆனால் அறைகொள்ளாமல் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களை இன்னொரு அறையில் நிற்கவைத்தோம். சுரேஷ்குமார இந்திரஜித் சுவாசநோய் கொண்டவர். ஆகவே கோவிட் பற்றி மிக எச்சரிக்கையாக இருந்தோம். அறை அவர் வருவதற்கு முன்பு முற்றாக தூய்மை செயப்பட்டது

விஷ்ணுபுரம் நண்பர் ராம்குமார் ஐ.ஏ.எஸ் [மேகாலயா ] விருதை வழங்கினார். மற்றபடி ஆவணப்படம், கட்டுரைகள் நூல்வெளியீடு எல்லாமே முறையாக நிகழ்ந்தன. சொல்லப்போனால் அறைக்குள் நல்ல ஒரு கருத்தரங்கமும் நடைபெற்றது.

 

விஷ்ணுபுரம் விருது விழா-2020

விஷ்ணுபுரம் விழா 2020- கடிதங்கள்

நுண்கதைசொல்லியும் தொடர்பவர்களும்

சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்

குறைவாகச் சொல்லும் கதைசொல்லிக்கு வாழ்த்து

சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை-1
சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 2 

சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 3

முந்தைய கட்டுரைஎழுதுக!
அடுத்த கட்டுரைகாலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-3, ஜெயமோகன்