வெண்முரசின் துரியோதனன்

பன்னிரு படைக்களம் வாசித்து இன்று முடித்தேன் .ஆசிரியரே பிழை செய்தேன் நான் முழு மகாபாரதம் அறிந்தவன் அல்ல நான் இந்நாவல் தொடர் வழியாக இதுவரை அறிந்து வந்த துரியோதனன் முற்றிலும் வேறானவன் . அணையா சினமும் பெரும் விழைவும் பெரும் தோள்களும் கொண்ட எளிய அரசன். அவரின் ஊழ் அவரை சிறுமை அடைய செய்தது பெண் என்று அவர் நெஞ்சில் சூடிய அத்தனை இடத்திலும் பார்த்தன் வந்து நின்றான் அவர் நெஞ்சில் அணையா வஞ்சத்தை ஏற்றினான் அவனின் வில்திறன் அவனுக்கு அளித்த செருக்கு. பாண்டவர்களை தொழும்பர்கள் என்று துரியோதனன் அழைத்த அந்த இடத்தில் என் நெஞ்சில் இருந்த துரியோதனன் இறந்தான்… அன்று ( நதிக்கரையில் சிறுகதை) பீமனின் உளகொதிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் இன்று பீமனின் அகம் அறிகிறேன்.

” என் குலமகள் ஒற்றை ஆடையுடன் சபை முன்னே நின்றாள் அந்த ஒற்றை பழிக்காக அந்த அகமன் தலையை இன்னும் ஏழு ஏழு ஜென்மத்துக்கு எட்டி உதைப்பேன் . காலம் உள்ளவரை என் தலையை மணிமுடி அணி செய்ய வேண்டியதில்லை இப்பழிழே என் அணியாகும்.”

பெண் என்னும் வெல்ல முடியாமைக்கு அப்பால் சிறுமை கொண்டு கீழ்மை சூடிக்கொண்டான் துரியோதனன் . வெறும் நெறிகள் பேனும் மூடர் கூட்டம் அஸ்தினபுரி ஆண்கள். இனி காலம் உள்ளவரை அவன் மூதாதையரும் அவன் குளமும் கீழ்மை சூடி நிற்க போகிறது..

 

ஏழுமலை.

 

அன்புள்ள ஜெ

வெண்முரசின் துரியோதனன் பற்றி எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. நான் இப்போதுதான் அவன் இறக்கும் இடம் வரை வந்து சிலநாட்களாகவே அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்து விடுபடவே முடியாமல் இருக்கிறேன். தமிழகத்துக்கு துரியோதனன் பெரிய கதாபாத்திரம். இங்கே தெருக்கூத்தில் நிறைந்து நிற்கும் ஆளுமை. துரியோதனனுக்குத்தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சிலைகள் வடிக்கப்படுகின்றன. படுகளம் கொண்டாடப்படுகிறது.

நாட்டுப்புற மகாபாரதத்தில் துரியோதனன் எளிமையான கதாபாத்திரம். ஆணவம் கொண்டு பெண்ணை அவமதித்து அழிந்தவன். அப்படி ஆணவத்தால் பெண்பழி கொள்ளும் ஏராளமான அரசர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள். சங்க கால நன்னன் முதல் உள்ளூர் ஜமீன்தார்கள் வரை. அவர்களின் தோற்றத்துடன் இணைவதனால்தான் துரியோதனன் இங்கே இவ்வளவு பெரிதாக வளர்ந்தான்

பௌராணிக மரபிலும் துரியோதனன் ஒற்றைப்படையான துஷ்ட கதாபாத்திரம். அசல் மகாபாரதத்தை வாசித்தால் அவனுடைய மாண்பும் பெருமையும் வெளிப்படும் பல இடங்கள் உள்ளன. ஆனால் அவை மறைந்துகிடக்கின்றன. வெண்முரசின் துரியோதனன் மிகச்சிக்கலான கதாபாத்திரம். மகாபாரதத்தில் உள்ள சிறு சிறு குறிப்புகளை எல்லாம் எடுத்து விரிவாக்கி அந்தக் கதாபாத்திரத்தைச் சிக்கலானதாக ஆக்கிக்கொண்டே செல்கிறீர்கள்.

அவன் ஆண்மையும் பெருந்தன்மையும் மிக்கவன். பெருந்தந்தை. தன் சகோதரர்களுக்கும் தந்தையானவன். அவனுடன் அத்தனை அரசர்கள் ஏன் இணைந்து நின்றார்கள் என்பதற்கான விடை அது. அவனுடைய ஒரே பலவீனம் மண்ணாசை. அதுகூட தவறான ஆசை அல்ல. எந்த அரசனுக்கும் தேவையான உணர்வுதான். அந்த மண்ணாசையால்தான் அவன் அஸ்தினபுரியின் மக்களுக்கு தாய்வடிவமான ஆட்சியாளனாக இருந்தான்.

அப்படியென்றால் என்ன தவறு செய்தான்? அந்த மண்ணாசை ஒரு டிகிரி கூடிவிட்டது. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணம் உருவாகி அறத்தை கடந்து போகச் செய்துவிட்டது. எல்லாவற்றிலும் மேலானது அறம். அரசனுக்கு அதுவே ஆதாரம். எதன்பொருட்டு அறம் மீறினாலும் அழிவுதான்.

இத்தனைக்கும் துரியோதனன் போரில் அறத்தை மீறவில்லை. எந்த மைந்தரையும் கொல்லவில்லை. பாண்டவர்களின் மைந்தர்களேகூட அவன் மைந்தர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் அறம்பிழைத்தான். ஒரு சின்ன பிழை. ஆனால் மிகப்பெரிய ஆளுமை அதை செய்தமையால் அது மிகப்பெரிய பிழையாக ஆகிவிட்டது. நினைக்க நினைக்க விரிந்துகொண்டே செல்லும் ஆளுமை துரியோதனன் [தமிழில் இத்தனை பக்கம் படித்தும் தமிழில் எழுத முடியாமைக்கு மன்னிக்கவும்]

கிருஷ்ணகுமார் பரத்வாஜ்

பெருந்தந்தை-2

பெருந்தந்தை-3

கேரளத்தின் துரியோதனன் கோயில்

விளிம்புகள்

துரியோதனன் மனம்

துரியோதனி

துரியோதனன் படுகளம்

மறுவருகை

மண்வடிவன்

துரியோதனன் வஞ்சினம்

துரியோதனன் காதல்

துரியோதனனின் இரட்டை ஆளுமை

சாவு

துரியோதனன் வருகை

எதிர்த்து நின்று முக்தி பெறுவது

துரியோதனனின் மாற்றம்

பிரஜாபதி

அழியாதவன்

சொற்கள்

வஜ்ரம்

துரியோதனர்கள்

வீரனின் முழுமை

முகம்

அண்ணன்

 

முந்தைய கட்டுரைதெய்வச்சொல்
அடுத்த கட்டுரைகொரியமொழி கற்றல் – கடிதம்