சொல் தெளியா இசை- கடிதங்கள்

சொல் தெளியா இசை

ஹேமந்த் குமார் என்று இந்திப்பட வுலகில் அறியப்படும் ஹேமந்த முக்கோபாத்யாய மிகச் சிறப்பாக பாடகர். இசை அமைப்பாளர்.‌ ரவீந்திர சங்கீதத்தில் மேதை. இந்தியில் அவர் இசையமைத்த பீஸ்சால்பாத், காமோஷி படப்பாடல்கள் சாகாவரம் பெற்றவை. வங்க கதாநாயகர் உத்தம் குமாருக்கு அவர் பாடிய பாடல்கள் ஏராளம். சலீல் சௌதுரியை விட சீனியர்.

இவர் இசையமைத்து பாடிய எய் ராத் துமார் அமார் எனற பாடல் (படம் தீப் ஜ்வலே ஜாய்) வங்க திரைப்பாடல்களில் தலைசிறந்த ரொமான்டிக் பாடலாகச் கருதப்படுகிறது. தெலுங்கில் இந்தப் படத்தை எடுத்தபோது அதே ட்யூனில் கண்டசாலா பாடினார்‌. சற்றே மாறுபட்டு ஹேமந்த்குமார் இசையமைத்து பாடிய இந்தி மறூஆக்கத்திலும் (காமோஷி) இந்த பாடல் மிக பிரசித்தி பெற்றது. புகார் லோ..துமாரா இந்தசார் ஹை..

அன்புடன்

எஸ் கணேஷ்

 

அன்புள்ள ஜெ

உண்மைதான். அந்த வங்கமொழிப்பாடல் அதன் ஒரு வார்த்தைகூட புரியாதநிலையில் ஒரு மர்மமான கவர்ச்சியை அளிக்கிறது . எங்கோ சம்பந்தமில்லாத ஏதோ ஓர் இடத்தில் அந்தப்பாடலைக் கேட்டதுபோன்ற ஓர் அனுபவம். இசை என்றாலே தெரியாத மொழியில்தான் இருந்தாகவேண்டுமோ என்றெல்லாம்கூட நினைத்துக்கொண்டேன்

அருண்குமார்

முந்தைய கட்டுரைகாடு- எம்.கே.மணி
அடுத்த கட்டுரைமலையாளப் பாடல்களில் சம்ஸ்கிருதம்