புவியரசு 90, நிகழ்வு அழைப்பு

அன்பு நண்பர்களுக்கு,

கவிஞர் புவியரசு அவர்கள் 90-வயது நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாசகர்கள், நண்பர்கள் நடத்தும் “புவி – 90” என்ற நிகழ்வு கோவையில் 24.10.2021 அன்று இரவு உணவுடன் நடைபெறவுள்ளது.

பெருந்தொற்று காரணமாக கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் கோவையில் தளர்த்தப்படவில்லை. எனவே இந்நிகழ்வு, 75 நபர்கள் மட்டும் பங்கெடுக்கும் உள்ளரங்க நிகழ்வாக நடத்தப்பட உள்ளது.

மாலை 5.30க்கு தொடங்கி 8.30க்கு முடிவதாக நிகழ உள்ள இவ்விழாவுக்கு வரும் நண்பர்களை இத்துடன் இணைத்துள்ள கூகிள் விண்ணப்பத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி உறுதி செய்யப்பட்ட நண்பர்களுக்கு அவர்களது பதிவு எண் மெயிலில் அனுப்பப்படும். பதிவு எண் பெற்றவர்கள் மட்டுமே இவ்விழாவில் கலந்துகொள்ள இயலும். பிறர் எக்காரணம் கொண்டும் அரங்கில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

இவ்விழாவில் கவிஞர் புவியரசு, எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் பவா செல்லதுரை அகியோர் பங்கேற்க இசைந்துள்ளனர். மற்ற விருந்தினர்களை உறுதி செய்தபின்னர் தெரிவிக்கிறோம்.

* பெருந்தொற்று விதிகள் காரணமாக வெளியூரிலிருந்து வரும் நண்பர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்க இயலாது.

நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து கொண்டாடப்படும் விழாக்கள் கூடிய விரைவில் நிகழ்வதாக.

நன்றி.

கூகிள் விண்ணப்ப படிவம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் கோவை

முந்தைய கட்டுரைஅஜ்மீர் பயணம்-1
அடுத்த கட்டுரைகடிதங்கள்