நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் ஒன்பதாவது வெண்முரசு கூடுகை 26-09-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான திரு. கடலூர் சீனு அவர்கள் “நீலம்” நாவல் குறித்து ஒரு சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அமர்வில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
நாள் : 26-09-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954