வளர்பவர்கள்

அருண்மொழியின் குடும்பத்தில் எனக்கு முதலில் அணுக்கமாக ஆனவர்கள் அவளுடைய மாமாவும் அத்தையும்தான். திரு.வடிவேல் உற்சாகமே உருவானவர். உயரமாக சிவப்பாக பெரிய மீசையுடன் போலீஸ்களையுடன் இருப்பார். ஏதாவது அரசியல்கட்சி கூட்டங்கள் நடந்தால் கூட்டம் நடைபெறுவதற்கு அரைமணிநேரம் முன்பு பைக்கில் ஊரையும் களத்தையும் ஒரு சுற்றுசுற்றி வருவார். ஏராளமான போலீஸ்காரர்கள் அவருக்கு சல்யூட் அடித்துவிடுவார்கள். அதில் அப்படி ஓர் இன்பம். அஹ்ஹஹ்ஹா என நமக்கு அடிவயிறு கலங்கவைக்கும் வெடிச்சிரிப்பு.

மறைந்தவர்கள் வளர்வதைப்பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். சங்கசித்திரங்கள் நூலில்.

பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதல் பாகன்
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு

கலங்கினேன் அல்லனோ யானே! பொலந்தார்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே.

பெரிய கவளம் கொடுத்து பல ஆண்டு பேணிய பேருருவ யானையை இழந்த ஏழைப்பாகன் அது நின்றிருந்த கொட்டிலின் வெறுமையைக் கண்டு கண்ணீர் உகுப்பதுபோல நானும் இதோ தேர்த்திறன் மிக்கவனும், பொன்னணி அணிந்தவனுமாகிய கிள்ளி மறைந்தபின் அவனில்லாத இந்த முழங்கும் தொல்நகரின் நகர்மன்றத்தைக் கண்டு கலங்குகிறேன்.

நிலை- அருண்மொழிநங்கை

முந்தைய கட்டுரைஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்
அடுத்த கட்டுரைமொழிக்கு அப்பால்…