ராவுத்தர் மாமாவின் கணக்கு

சில நாட்களுக்கு முன்பு ஆட்டுக்கறி சாப்பிட்டு அருண்மொழிக்கு முதல்முறையாக அலர்ஜி வந்தது. முகத்தில் தடிப்புகள் வந்து மூட்டுகளில் வலியும் மூச்சுத்திணறலும். டாக்டர் மாரிராஜ் சொன்ன மருந்துகளால் ஒரே நாளில் சரியாகியது. ஆனால் இனிமேல் வாழ்க்கையில் மட்டனுக்கு இடமில்லை. “அய்யோ, எங்க ராவுத்தர் மாமா அருமையா கறிகொண்டுவந்து சாப்பிடக் கத்துக்குடுத்தாரே” என கண்ணீருடன் ஏங்கினாள். இரண்டுநாள் ராவுத்தர் மாமா பேச்சாக இருந்தது.

இந்தக்கட்டுரையில் பேசப்படும் அந்த ராவுத்தர் மாமா அருண்மொழியின் பேச்சில் முப்பதாண்டுகளாக மாதமொருமுறையாவது தோன்றிக்கொண்டே இருக்கும் மனிதர். வாழ்க்கையின் பெரும்பாலான சந்தர்ப்பங்களைப் பற்றி குட்டி அருண்மொழிக்கு ராவுத்தர் மாமா ஏதாவது சொல்லிக் கொடுத்திருக்கிறார். மனிதர்களின் குணாதிசயங்கள் மிக ஆழமாக நெஞ்சில் பதியும் அவ்வயதில் உயர்குணங்கள் மட்டுமே கொண்ட அந்த ஆளுமை அத்தனை அண்மையில் இருந்திருக்கிறது.

ஒற்றை வரியில் அந்த மொத்த மெய்ஞானத்தையும் ‘ஒவ்வொருத்தரும் அவங்க பாட்டுக்கு இருப்பாங்க. நாம நம்ம பாட்டுக்கு இருக்கணும்’ என்று சுருக்கிவிடலாமென நினைக்கிறேன். இன்றுவரை மற்றவர்களின் குறைகளை அருண்மொழி உணர்வதே இல்லை. அவளுடைய குன்றா உற்சாகமும் இயல்பான அன்பும் அதன் விளைவுதான்.

அருண்மொழியின் அப்பாவின் பேச்சிலும் ராவுத்தர் அடிக்கடி வந்துகொண்டிருப்பார். அவருடைய இல்லத்திற்கு சென்றதைப் பற்றிய பேச்சுக்கள் செவியில் விழுந்திருக்கின்றன. நான் ராவுத்தரைச் சந்தித்ததில்லை. சந்தித்திருக்கலாமென இப்போது தோன்றுகிறது.

ராவுத்தர் மாமாவின் கணக்கு
முந்தைய கட்டுரைஇலங்கை முகாம்கள், கடிதம்
அடுத்த கட்டுரைஇன்றைய சிற்பவெற்றிகள் எவை?