பேட்டிகள், கடிதங்கள்

கைரளி பேட்டி
ஏசியாநெட் பேட்டி

அன்பு ஜெ,

பேட்டி எங்கும் நிறைந்திருந்த பச்சை நிறம், நீரும் மனதை சாந்தப்படுத்திக்கிறது, எங்கோ என்னுள் வாழும் ஆதிமனிதனுக்கு அது செழிப்பையும், அதன் மூலம் வாழ்வை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையே அளிக்கறதோ என்னவோ. உங்களது asianet பேட்டி கண்டேன் – நல்ல இசை கோர்ப்பு, காணொளி மிக கவித்துவமாக தொகுக்கப்பட்டிருந்து. ஒரு பேட்டியாளனாக, subject மையப்படுத்தி கேள்விகளை கேட்டது மிகவும் பிடித்தது

உங்களுடனே காலைநடை சென்றது போல உணர்ந்தேன்.

பேரன்புடன்

கோபி

***

அன்புள்ள ஜெ

ஆசியாநெட், கைரளி பேட்டிகள் அழகான உணர்வை உருவாக்கின. அவை உங்களை உங்கள் நிலத்தில் வைத்து அறிமுகம் செய்திருக்கிறார்கள். பொதுவான வாசகர்களுக்கான பேட்டிகள். ஆகவே சுருக்கமாக இருபது நிமிடங்களில் முன்வைக்கிறார்கள். நீங்கள் எழுதும் உலகத்தின் ஒரு விரிவான சித்திரத்தை அவை அளிக்கின்றன.

தமிழிலும் முக்கியமான எழுத்தாளர்களை அவர்களின் வீடுகளுக்கும் மண்ணுக்கும் அழைத்துச்சென்று இதேபோல பதிவுசெய்து ஒரு தொடர்கூட வெளியிடலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் மல்லாங்கிணறு, யுவன் சந்திரசேகரின் கரட்டுப்பட்டி எல்லாம் பதிவாகவேண்டும். அப்போதுதான் நாம் இலக்கியத்திற்குள் உண்மையாக நுழைகிறோம்

இன்றைக்கு நம் டிவியில் இதெல்லாம் சாத்தியமில்லை. ஆளில்லை. யூடியூப் சானல்களில் இதை எவராவது செய்யலாம்.

சாரங்கன்

ஏசியாநெட் பேட்டி, கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசுக்குப் பின் ராமன் கதையா?
அடுத்த கட்டுரைநீலம் கடலூர் சீனு உரை, கடிதம்