தஸ்தயேவ்ஸ்கி, நற்றுணை கலந்துரையாடல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

‘நற்றுணை’ கலந்துரையாடலின்  அடுத்த அமர்வு வரும் ஆகஸ்டு 22 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்களின்  கரமசோவ் சகோதரர்கள்  நாவல் குறித்து  எழுத்தாளர் அருண்மொழிநங்கை  அவர்கள் உரையாடுவார்.

இவ்வருடம்  ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்களின் இருநூறாம் ஆண்டு என்பதால் இந்நிகழ்வில் ரஷ்யகலாசார மையத்துடன் இணைந்து நாம் இந்த கலந்துரையாடலை முன்னெடுக்கிறோம். சிறப்பு விருந்தினராக ரஷ்ய கலாசர மையத்தின் இயக்குனர்,  Mr.Gennadii Rogalov (Director Russian House in Chennai )  அவர்களும் நம் உரையாடலில் கலந்து கொள்கிறார்.

நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -7

நாவல் – கரமசோவ் சகோதரர்கள் – ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

கலந்துரையாடல் நாள்:- 22-08-21

நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

தொடர்புக்கு: 9965315137

(லா.ஓ.சி. சந்தோஷ்  )

சிறப்பு விருந்தினர்:- திரு. கென்னடி ரோகலோவ்  ( இயக்குநர் – ரஷ்ய கலாசார மையம் – சென்னை)

நாவல் குறித்து உரையாடுபவர்:- எழுத்தாளர் திருமதி. அருண்மொழிநங்கை அவர்கள்

(ரஷ்ய இலக்கியங்கள் குறித்த எழுத்தாளரின் பதிவு)

பனி உருகுவதில்லை.

நிகழ்வின் நெறியாளர்:- எழுத்தாளர் சுசித்ரா அவர்கள்

ரஷ்ய கலாசார மையத்தின் சமூக வலைதள பக்க அறிவிப்பு

https://www.facebook.com/164145250307603/posts/4217231818332239/?app=fbl

இது வழக்கம் போலவே ஒரு  கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு  இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்

நன்றி!!!

அன்புடன்,

சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்

முந்தைய கட்டுரைஊடும்பாவுமென ஒரு நெசவு
அடுத்த கட்டுரைஞானி, கடிதங்கள்