தேசமற்றவர்கள் – கடிதம்

தேசமற்றவர்கள்

அன்புள்ள ஜெ

தேசமற்றவர்கள் என்ற சொல் திகைக்கச் செய்தது. ஒரு தேசம் அதில் பிறந்து வளர்ந்தவர்களை அன்னியர்களாக நினைக்கிறது என்பதைப்போல குரூரமானது ஏதுமில்லை. இங்கே தமிழியமும் ஈழ அரசியலும் பேசுபவர்கள் கூட ஈழத்து அகதிகளுக்காகப் பேசவில்லை. உண்மையில் அவர்கள் பேசினால்தான் பெரிய சிக்கல். அவர்கள் பொறுப்பில்லாமல் பேசும் தமிழ்த்தேசியப் பிரிவினை அரசியல்தான் ஈழத்து குடியேறிமக்கள் மேல் மைய அரசு அவநம்பிக்கை கொள்ள காரணமாக அமைகிறது.

மைய அரசுக்கு திபெத்தியர், வங்காளிகள் மேல் இருந்த நம்பிக்கை இவர்கள் மேல் இல்லை. ராஜீவ்காந்தி கொலை நடக்காமல் இருந்திருந்தால், இங்கே தமிழ்ப்பிரிவினை பேசும் கும்பல்கள் உருவாகாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஈழத்து அகதிகளும் குடியுரிமை பெற்றிருப்பார்கள். இங்கே தமிழ்ப்பிரிவினைவாதம் பேசுபவர்களுக்கும் ஈழ அகதிகள் இப்படி கைவிடப்பட்ட நிலையில் இருப்பதுதான் வசதி என நினைக்கிறேன்.

ஆர்.சண்முகம்

***

அன்புள்ள ஜெ

தேசமற்றவர்கள் குறிப்பு படித்தேன். பலமுறை எழுதியிருக்கிறீர்கள். பொறியியல்படிப்பு முடித்தபின் கூலிவேலைக்குச் செல்லும் ஈழ அகதிகள் பற்றி முத்துராமனே எழுதியதை ஞாபகம் படுத்திக்கொள்கிறேன். கசப்பும் துயரமும் ஏற்படுகிறது. என்ன செய்ய முடியுமென்று தெரியவில்லை. இத்தனை பெரிய தமிழகத்தில், இத்தனை வாய் உபச்சாரங்களுக்கு நடுவிலேதான் இந்த மாபெரும் அநீதியும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது

எஸ்.லட்சுமணன்

ஈழ மாணவர்களுக்கு உதவி

ஒரு வாழ்வுரிமைக்கோரிக்கை

முந்தைய கட்டுரைமனிதர்கள்“-சிறுகதைத் தொகுதி-நா.கிருஷ்ணமூர்த்தி-வாசிப்பனுபவம் -உஷாதீபன்
அடுத்த கட்டுரைசுவாமி ரமணகிரி- ஒரு முழுமை