மழையும் ரயிலும் – கடிதங்கள்

ரயில்மழை

அன்புள்ள ஜெ

வாட்ஸப் வழியாக இந்தக் கட்டுரைக்கான சுட்டி வந்துசேர்ந்தது. மழைரயில் என்னும் கட்டுரை. மழையில் ரயிலில் செல்லும் அனுபவம்.அற்புதமான ஒரு சொற்சித்திரமாக அமைத்திருக்கிறீர்கள். மழைக்கு ரயிலில்தான் செல்லவேண்டும். பஸ் மழைக்கு உகந்தது அல்ல. மழையில் பஸ் ஒருமாதிரி சீறி உறுமிக்கொண்டு செல்கிறது. நகரத்துச் சாலைகளில் ஓடுகிறது. ரயில்தான் பரந்த வயல்வெளிகள், பொட்டல்கள் வழியாக ஓடுகிறது. மழையில் மண் குளிர்வதை ரயிலில் போனால்தான் காணமுடியும். ரயிலில்தான் மழையை முழுமையாக உணரமுடியும்.ரயில் அப்படியே மழையில் குளிர்ந்துவிடுகிறது. ரயிலுக்குள் இருக்கும்போது நாம் நனையாமல் மழைக்குள் இருக்கும் உணர்வு உருவாகிறது

ராஜி

***

அன்புள்ள ஜெ

திடீரென்று இந்த கட்டுரை வலைச்சூழலில் பிரபலமாகியிருக்கிறது. நான் இப்போதுதான் வாசிக்கிறேன். மூன்றாண்டுக்குப்பிறகு எழுதிய கட்டுரை. அரசியல் கட்டுரைகள் இலக்கியக்கட்டுரைகள் எல்லாம் பழையதாகிவிடுகின்றன. இந்தக்கட்டுரை இப்போது எழுதிய கட்டுரைபோல தூய்மையாக மாறாமல் உள்ளது. அந்த மழை அப்படியே மூன்றாண்டுகளாக அப்படியே பெய்துகொண்டிருப்பதுபோல ஒரு வகை உணர்வு ஏற்படுகிறது

ஜெயக்குமார்

கருவிமாமழை

முதல் மழை

மழையைத்துரத்துதல்

ஆனியாடி

இடவப்பாதி

மழையில் நிற்பது….

வரம்பெற்றாள்

பருவமழைப் பயணம்-2010 – படங்களுடன்

பருவமழைப் பயணம்

பருவமழைப்பயணம் 2012

மழைப்பயணம் 2017

மழை- கடிதங்கள்

முந்தைய கட்டுரைகுதிரை மரம்- தேவதாஸ்
அடுத்த கட்டுரைநூலகப்புரவலர் அனுபவம் – கிருஷ்ணன் சங்கரன்