வெள்ளை யானை, கடிதங்கள்

வெள்ளையானை வாங்க

வணக்கம் ஜெ சார்,

உங்கள் தளத்தின் முகப்பில் வெள்ளை யானை விவாதம் கவனித்திருந்தாலும், (உள் செல்லாமல்) எதைப் பற்றியதாக இருக்கும்? என்ற ஐடியா இல்லாததால் வாசிப்பதை ஒத்திப் போட்டிருந்தேன்.

சமீபத்தில் காடு நாவலை கிண்டிலில் வாசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், என் கணவர் வெள்ளை யானை வாசித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக அதில் இடம் பெற்றிருந்த பஞ்சத்தைப் பற்றி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்து விட்டு, “நீ கண்டிப்பாக இதை வாசிக்க வேண்டும்” என்றார். எனக்கு உண்மையாகவே வாசிக்க கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், வாசிக்க ஆரம்பித்து, முடித்தும் விட்டேன்.

சிறுவயதில் ஊரில் இந்தப் பஞ்சத்தைப் பற்றிப் பலர் சிலாகித்துக் கூறியதும், குறிப்புகளாக பஞ்ச காலத்தில் பட்டினியால் லட்சக்கணக்கானோர் இறந்தனர் என்று, சில கட்டுரைகளில் வாசித்ததும் நினைவில் உள்ளது.

நாவலில் ஐஸ் ஹவுஸ் தொடக்கத்திலிலேயே வெள்ளை யானை புரிய ஆரம்பித்து விட்டது. சுமார் 15 வருடம் முன்பு சென்னையில் வேலை விசயமாகச் சென்று திரும்பும் பொழுது, ஐஸ் ஹவுஸ் ஸ்டாப்பில் பேருந்திற்காக காத்திருந்தேன். அருகிலிருந்த பைத்தியக்கார கிழவன் அழுக்கு பேண்ட் சட்டையுடன் ஆங்கிலத்தில் என்னிடம் உளரிக் கொண்டிருந்தார். (ஐஸ் பேக்டரியில் நடந்த அந்தக் கடைசி நிகழ்வு பற்றி.) பின்னர் அவர் அழ ஆரம்பித்தார், தலையில் அடித்துக் கொண்டார், என்னைத் திட்டினார். அருகிலிருந்த செருப்பு தைப்பவர், என்னை சமாதானம் செய்து அவர் சிலரிடம் இவ்வாறு நடந்து கொள்வார் என்றார்.

அன்றிரவு என்னால் உறங்க முடியவில்லை, ஐஸ் ஹவுஸ் என்றால் அந்த பைத்தியக்கார கிழவர் தான் ஞாபகம் வருவார். இந்ந நிகழ்வு நடந்த கால கட்டத்தில் 75 (2005ல்) மதிக்கத்தக்க அந்த கிழவர் நேரடியாக சம்பத்தப்பட்ட பட்டிருக்க வாய்ப்பில்லைதான்.

நாவல் படித்து முடிக்கும் வரை எய்டன், காத்தவராயன், பாதர் கதாபாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும், பஞ்சத்தின் கோர நிகழ்வுகளைப் பதிவிடும் மேலான நோக்கில் தங்களுக்கு ஏற்படும் தீவிரமான உணர்வுகளையும் கடந்து செல்லும் அவர்களின் மனநிலையிலேயே நானும் வாசித்து முடிக்க வேண்டியதாக இருந்தது.

ராஜி

***

அன்புள்ள ஜெ

வெள்ளையானை நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். பஞ்சம் இந்நாவலின் ஒரு பின்புலம்தான். இத்தகைய ஒரு சூழலில் ஒவ்வொருவரும் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றைய கொரோனாவும் பஞ்சம்போலத்தான். சிலருக்கு அது லாபம் கொய்யும் ஒரு சூழல். சிலருக்கு மனிதாபிமான உதவிகள் செய்யவேண்டிய களம். சிலருக்கு அதிகார அரசியல். ஏய்டன் போன்ற சிலருக்கு அது மானுட உண்மையை கண்டடையும் ஒரு பரிசோதனைக்களம்

ஆர். குமரேசன்

வெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்
கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…
வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?
கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை
வெள்ளை யானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம்
அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை
வெள்ளையானை – பலராம கிருஷ்ணன்
வெள்ளையானை – கடிதம்
வெள்ளையானை கடிதங்கள்
வெள்ளையானை -சிவமணியன்
வெள்ளையானை -கடிதங்கள்
வெள்ளையானையும் உலோகமும்
வெள்ளையானையும் கொற்றவையும்
வெள்ளையானை- சுரேஷ் பிரதீப்
வெள்ளையானையும் மீட்கப்பட்ட கப்பலும்
வெள்ளையானை -கடிதங்கள்
வெள்ளையானை – ஒரு விமர்சனம்
வெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும்
வெள்ளையானை -அடக்குமுறையும் சாதியும்
வெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்
வெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி
முந்தைய கட்டுரைசொல்முகம் ,வெண்முரசு கூடுகை
அடுத்த கட்டுரைபொலிவன, கடிதங்கள்