அன்புராஜ் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் அந்தியூர் அன்புராஜுடன் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. மிகமுக்கியமான ஓர் ஆவணம். குறிப்பாக கலையின் வழியாக மீட்பு என்னும் அந்த வரியே முக்கியமான ஒன்று. அவருடைய பல பேட்டிகளும் அவரைப்பற்றிய குறிப்புகளும் பல இதழ்களில் வந்துள்ளன. ஆனால் அவற்றில் எவற்றிலும் இல்லாத ஆழம் இந்தப்பேட்டியில் இருந்தது. உங்கள் தளத்தை நான் தினமும் படிக்கிறேன். முன்பு பிரசுரமான கட்டுரைகளைப் பற்றி நீங்கள் அளிக்கும் குறிப்புகள் வழியாகச் சென்று படிக்கிறேன். ஆனாலும் இக்கட்டுரையை தவறவிட்டுவிட்டேன். ஒவ்வொரு நாளும் படித்தாகவேண்டிய ஒன்று உங்கள் தளம். ஓரிருநாள் விட்டுவிட்டால்கூட இத்தகைய ஆழமான சில விஷயங்கள் விடுபட்டுவிடும். வாசிக்க வாசிக்க ஆச்சரியம்தான். எத்தனை கட்டுரைகள், பேட்டிகள், விவாதங்கள். ஒரு பெரிய கலைக்களஞ்சியம்போலிருக்கிறது இந்த தளம். தமிழில் இதைப்போல இன்னொரு இலக்கியத்தளம் வேறில்லை என நினைக்கிறேன்.

அன்புராஜ் நீங்கள் சொல்லிவரும் அனைத்துக்கும் வாழும் சாட்சிபோல் இருக்கிறார். கலை மனிதனை பண்படுத்தும், மீட்கும் என்பதற்கு அவரைப்போல இன்னொரு சான்றே தேவை இல்லை. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

எட்வின்ராஜ்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

***

முந்தைய கட்டுரைகாடு, கடிதம்
அடுத்த கட்டுரைநேரம் – ஒரு கடிதம்