சேலம் மாவட்டத்து நடுகற்கள்- சுகதேவ்

அன்புள்ள ஜெ ,

நலம் என்று நினைக்கிறேன். நானும் நலமே. பயிற்சி மருத்துவராக இருந்த சமயத்தில் சேலத்தில் உள்ள நடுகற்கள் , வரலாற்று இடங்கள் குறித்து சிறு சிறு பயணங்கள் செல்வோம். அப்படி சென்ற பயணத்தை பற்றிய குறிப்பு எழுதலாம் என்று தோன்றி எழுதி பார்த்தேன். லோகமாதேவி மேடமிடம் அனுப்பி அவர்களின் கருத்தை கேட்டேன். அவர்கள் தான் தாங்கள் ஒசூர் சுற்றி உள்ள நடுகற்களை பார்வையிட சென்று உள்ளதாக கூறினார். அதனால் உங்களிடன் இதை பகிர்ந்து கொள்ள சொன்னார். நடுகற்கள்  பற்றிய உங்கள் கருத்தையும் அதை பார்வையிட செல்வதற்கான அடிப்படைகளை பற்றி உங்கள்  அறிவுரை நேரம் இருக்கும் போது கூற முடியுமா?

சேலத்தின் நடுகற்கள் -1

நன்றி ,

சுகதேவ்.

மேட்டூர்.

அன்புள்ள சுகதேவ்

நடுகற்கள் பற்றிய உங்கள் கட்டுரை ஆர்வமூட்டுவதாக இருந்தது. படங்களும் நன்றாக இருந்தன.  இத்தகைய பயணங்களுடன் இவற்றுடன் இணையும் நூல்களையும் வாசித்துக்கொண்டிருப்பது ஒட்டுமொத்தமான சித்திரம் உருவாக உதவும். ஆநிரை கவர்தல் தமிழிலக்கியத்தில் ஆகோள்பூசல் என சொல்லப்படுகிறது. அதைப்பற்றி வெவ்வேறு அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ராஜ்கௌதமனின் ‘ஆகோள்பூசலும் பெருங்கற்கால நாகரீகமும் ’ ஒரு முக்கியமான நூல்.

ஜெ

ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைபாணனின் நிலம்
அடுத்த கட்டுரைகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்