நகைச்சுவை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

Iam nobody are you nobody too? என்கிற வரி நினைவு வந்தது. Are you not thinking what iam not thinking படித்தவுடன். Iam nobody..  மேற்கோளை நீங்கள் நவீனத்துவத்துக்குப்பின் கவிதை தேவதேவனை முன்வைத்து புத்தகத்தில் இவ்வரி ஒரு பியானோ ஒலி போல அனுபவிப்பதாக எழுதியிருந்தீர்கள். அந்த வரி எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. நானும் அந்த கவிதையைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் இருந்தேன்.

”எப்ப பாத்தாலும் இதை கடிச்சுக்கோ, அதை கடிக்காதே. இதப்பாத்து குரை அதைப்பாத்து குரைக்காதே. இதை தின்னு, அதை தின்னாதே. என்னோட இருத்தலே வெறும் தெரிவுகளா ஆயிட்டுது, சே” இதை நான் நினைத்து இதே போல நொந்துகொண்டுள்ளேன் மானசீகமாக உங்களுடன்தான்.

”எப்பவாச்சும் எல்லாத்தையும் கடாசிட்டு அக்கடான்னு கன்சூமரிசத்திலே குதிச்சிடணும்னு தோணுறதுண்டா” நான் இவ்வாறு பலமுறை இவ்வாறான எண்ணங்களை கொண்டதுண்டு.

கடைசியா கெளம்பிப் போறவர் ஞானஒளிய அணைச்சுட்டு போகவும் இதுவும் ஞானத்தோட உயரம் ஜாஸ்தி ஆகிறப்ப ஆக்ஸிஜன் மாஸ்க் அதுவா விழுந்திரும் இங்கநான் யோகம் தியானம் செய்யும்பொழுது பெரும்பாலும் காலை இப்படிதான் ஆகிறது. ”வாழ்க்கை நெடுஞ்சாலையிலே அவசரமா போறப்ப அப்பப்ப கொஞ்சம் நின்னு வழியிலே பூத்திருக்கிற அழகான ரோஜாக்களையும் தின்னுடணும்” வேறு வழியேயில்லை.

சில பகிர. மற்ற அனைத்துமே மிக ஆழமானவையாக இருந்தது. நீங்கள் நடராஜகுரு நித்யாவின் விவாவத்தின்பொழுது சிரிக்கவேயில்லையே என்று கேட்டதைக் கூறுவீர்கள். இது நன்றாக உள்ளது. நானும் நகைச்சுவை தொடர்வேன்.

இன்று வந்த அமுதினியின் கவிதை அருமை. அமுதைப் பருகியவள். நானும் பருகுவேன்.

சுபஸ்ரீ

***

அன்புள்ள சுபஸ்ரீ

நகைச்சுவைக் கட்டுரைகள் ஒரு மாதகாலத்தை உற்சாகமாக வைத்திருந்தன. நாம் நம்பும் அனைத்தையும் தலைகீழாக்கியும் பரிசோதிக்க நகைச்சுவை ஒரு நல்ல வழி. குரங்கிடம் எதை கிண்ணத்தில் கொடுத்தாலும் தலைகீழாக கவிழ்த்தும் ஆராயும், அதைப்போல.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

வணக்கம்!

இந்த நாட்கள் எல்லாம் உங்களின் மெல்லிய நகைச்சுவைப் பதிவுகளினால்தான் இனிமை கொள்கின்றன. கார்ட்டூன் வாசகங்களின் மொழிபெயர்ப்பில் பலசமயங்களில் மூலத்தை விடவும் நகைச்சுவை அதிகமாக இருக்கின்றன. [வைபை கடவுச்சொல்லாக ஏதாவது வாங்கவும் அல்லது கிளம்பிச்செல்லவும் என்பதை தின்னுட்டு கிளம்பிப்போடா என்றது ஓர் எடுத்துக்காட்டு] வாசிப்பு வேகத்தில் JERKS என்னும் சொல்லை ஜீசஸ் என மொழிபெயர்த்தது இன்னொரு உச்சம் (பின்னர் திருத்தி விட்டாலும்).

ஜெ, முன்னர் ஒரு பேட்டியில் நீங்கள் குறிப்பிட்ட தழுவிய மகாதேவர் ஆலயத்தை மையமாகக் கொண்ட பகடி நாவலை எழுதுவதற்கு இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடையாது என நினைக்கிறேன். இந்த காலத்தில் நாவல் வெளியாவதற்கு ஏதாவது வாய்ப்பு உள்ளதா?

அன்புடனும் வணக்கத்துடனும்

செந்தில்நாதன்

***

அன்புள்ள செந்தில்நாதன்

எழுதவேண்டும். அதற்காக ஒரு மொழிநடையை தேடிக்கொண்டிருக்கிறேன். சிலகோணங்களில் எழுதிப்பார்த்தேன். சரியாக அமையவில்லை. பார்ப்போம்

ஜெ

31நேரா நிர்வாகம்

30 நிர்வாகம்

29இலக்கியம்!!!

28 ஏர்போர்ட்!

27விற்பனை!

26 விளம்பரம்

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’
10பகடை பன்னிரண்டு
9சிரிக்கும் ஏசு
8டேனியல் லாபெல்
7ஸாரி டாக்டர்!
6ஆடல்
5கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
4 மனம்
3குருவும் குறும்பும்
2இடுக்கண் வருங்கால்…
1ஆன்மிகமும் சிரிப்பும்
முந்தைய கட்டுரைதத்துவம் இன்று…
அடுத்த கட்டுரைஅனிதா அக்னிஹோத்ரி, கடிதம்