சில நேரங்களில்…

சில நேரங்களில் சில மீன்கள்

நதிப்பெருக்கில் இருந்து துள்ளி எழுகின்றன

பல்லாயிரம்கோடி மீன்களோ

நீருடன் வேறின்றி ஒழுகுகின்றன

சில நேரங்களில் சில மீன்கள்

பாய்ந்தெழுந்து

செதில்களைச் சிறகுகளாக்கி பறக்கின்றன.

 

சில நேரங்களில் வரலாறு

எளிய முத்திரைகளால் குறுக்கப்பார்க்கலாம்

வசைகளை மட்டும் அளிக்கலாம்.

இல்லையென்றே காட்டி

கடந்தும் செல்லலாம்.

உன் சொற்களின் முடிவில்லாத பொறுமை

உன் கருணையின் தெளிந்த உறுதி

வெற்றோசைகளால் மூழ்கடிக்கப்படலாம்

 

வரலாறு எப்போதும்

அதிலிருந்து மேலெழுபவர்களுக்கு உரியது.

*

 

திருமா

அலைகளில் இருந்து எழுந்த அறிதல்

திருமாவளவன் ஒரு கடிதம்

விடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம்

காந்தி,திருமா

சென்னை கண்டனக்கூட்டத்தில்…

அசோகமித்திரனும் திருமாவளவனும்

முந்தைய கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-13
அடுத்த கட்டுரை‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை