நியூசிலாந்தில் ஓர் உரை

வணக்கம் திரு. ஜெயமோகன் அவர்களே,

என் பெயர் செல்வா. நான் Quora தமிழின் சமூக மேலாளராகப் பணி புரிகிறேன். தற்போது நியூசிலாந்தில் வசித்து வருகிறேன். நாங்கள் இங்கே புதிதாக நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றம் ஒன்றைத் துவங்கியுள்ளோம். தன்னார்வலர்களால் நடத்தப்படும் இந்த மன்றம் தமிழ் சார்ந்து இயங்க விரும்புபவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தமிழ் மொழி வாசிப்பு, பேச்சு, எழுத்து சார்ந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாகும். இதன் மூலம் தமிழ்ப் புத்தகங்களை நியூசிலாந்து வாழ் தமிழர்களுக்கு வாசிக்கத் தருகிறோம். தற்போது கிறைஸ்ட்சர்ச் நகரில் செயல்பட்டு வரும் இந்த மன்றம் விரைவில் மற்ற நகரங்களிலும் செயலாற்றத் துவங்கும்.

இந்த மன்றத்தின் சார்பாக வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஒரு சிறிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அதில் நீங்கள் கலந்து கொண்டு உரையாற்ற ஒப்புக்கொண்டிருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இணைய வழி காணொளி மூலம் இந்த நிகழ்வை நடத்தவிருக்கிறோம். Zoom இணைப்பு வழிகாக உங்களது உரையை இங்குள்ள மக்கள் கண்டு மகிழ்வார்கள்.

நீங்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டிருப்பீர்கள். அங்கே மக்களுடன் உரையாடிய உங்களது பட்டறிவினை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். அந்நிய மண்னில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தாய்மொழி பேச, எழுத நேர்கொள்ளும் இன்னல்களும் அதை எதிர்க்கொள்ள உதவும் உத்திகளையும் குறித்து நீங்கள் உரையாடிய பின்னர் ஒரு சிறிய வினா விடை அங்கத்தையும் நிகழ்ச்சியுடன் சேர்க்க நினைக்கிறோம்.

இந்திய நேரப்படி காலை 8 மணி துவங்கி காலை 9 மணி வரை உங்களுடைய உரை மற்றும் வினா விடை நிகழ்வை நடத்த உள்ளோம்.

இது குறித்து மேலும் உங்களுடன் கைபேசியில் அழைத்து உரையாடுகிறேன்.

நன்றி,

செல்வ கணபதி

முந்தைய கட்டுரைவழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்
அடுத்த கட்டுரைகதகளி அனுபவம்- கடிதம்