சிவ நடனம் – ஆனந்த குமாரசாமி

ஆனந்தக் குமாரசாமி – தமிழ் விக்கி

ஆனந்தக் குமாரசாமியின் ‘சிவநடனம்’ என்னும் புகழ்பெற்ற கட்டுரை இரண்டு கோணங்களில் காலம் கடந்தும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, இந்தியக்கலை என்பது தனிப்பட்ட கலைஞனின் ஆளுமை வெளிப்படாத வெறும் அலங்காரக்கலை என்று மேலைநாட்டு கலைவிமர்சகர்கள் முன்வைத்த மழுங்கிய பார்வையை எதிர்த்து இந்தியக்கலையின் அடிப்படை என்பது கூட்டான குறியீட்டுச் செயல்பாடு, குறியீடுகளின் தொடர்வளர்ச்சி என அவர் நிறுவினார்.

இரண்டாவதாக, இந்தியக் கலையையும் இந்தியத் தொன்மங்களையும் இந்தியாவின் மாபெரும் மெய்யியல் மரபின் பின்னணியில் வைத்தே அணுகவேண்டும், அவை தத்துவச் செயல்பாட்டின் வடிவங்கள் என காட்டினார். அந்தப்பார்வை இன்று வேரூன்றிவிட்டது

ஆனந்தக் குமாரசாமி இன்றும் முக்கியமானவர் என்று தெரிவது இன்றும் ஆண்டுக்கு ஒரு ஐரோப்பிய [கிறித்தவப் பின்னணிகொண்ட] அறிஞர் கிளம்பி வந்து ஆனந்தக் குமாரசாமியை மறுத்து ஏதாவது எழுதுவார். ஆனந்தக் குமாரசாமி நிராகரிக்கப்பட்டார் என உள்ளூர் ஆங்கில நாளிதழ்களில் ஓரிரு கட்டுரைகள் வெளிவரும். அவருடைய அந்தப்பார்வை அவ்வண்னமே இன்றும் நீடிக்கிறது. அது இந்திய, இந்து மெய்மரபையும் கலையையும் அணுகுவதற்கான வழிகாட்டி.

‘சிவானந்த நடனம்’ என்றபேரில் இக்கட்டுரை முன்பும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நவீன மொழியாக்கம் தேவை என்று ஒரு தனிப்பட்ட உரையாடலில் நான் ஆனந்தக்குமராசாமி பற்றிப் பேசும்போது சொன்னேன். நண்பர் தாமரைக்கண்ணன் மீண்டும் மொழியாக்கம் செய்திருக்கிறார்

ஆனால் அழகியல் கோட்பாட்டுக் கட்டுரை. சற்று கூர்ந்த வாசிப்பு தேவைப்படுவது. அதன் மொழி ஒவ்வொரு சொற்றொடரிலும் நின்று செல்வதாகவே அமையும். ம்

எந்தவொரு மதத்திலும் கலையிலும் உள்ள ஒரு மிகச்சிறந்த கூறு, மற்றும் சிறந்த குறியீடாக உள்ள எதுவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக ஆகிறது; அது எல்லா காலங்களிலும் மனிதர்கள் தங்கள் ஆழ்மனதால் தேடி கண்டடையத்தக்க பொக்கிஷத்தை அவர்களுக்கு கொடுக்கிறது. சிவ நடனத்தின் தொடக்கம் எதுவாக இருந்தாலும், அது எல்லா மதங்களிலும் கலைகளிலும் இருப்பதைவிட கடவுளின் செயல்பாட்டை குறிக்கும் சிறந்த வடிவமாக காலத்தால் உருவாகி வந்துள்ளது

சிவ நடனம் – ஆனந்த குமாரசாமி


இந்த மாபெரும் சிதல்புற்று

விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…

நத்தையின் பாதை 1

முந்தைய கட்டுரைஇருபத்தைந்து கதைகள்- கடிதம்
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்