வண்ணக்கடல் அனைத்து கட்டுரைகளும்

வண்ணக்கடல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

அன்புள்ள ஜெ,

நலமாக உள்ளீர்களா ?

மழைப்பாடல்க்கு பிறகு வெண்முரசு வாசிப்பதில் ஒரு பெரிய இடைவேளை விழுந்துவிட்டது. வருத்தமாக உள்ளது. எனது மேற்படிப்பு ஒரு காரணம்(சொல்வது தவறுதான்).  இருப்பினும் தங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கடந்த ஒரு வாரமாக வண்ணக்கடலில் இருந்து துவங்கியுள்ளேன். எனக்கு இதை கேட்பது தவறாக தோன்றுகிறது. இருப்பினும் கேட்கிறேன். மன்னித்துவிடுங்கள். என்னைப்போன்று சிலர் இவ்விடைவெளியை சந்தித்து இருப்பார்கள், சிலர்  வெண்முரசுவை சிலநாட்கள் கழித்து துவங்கியிருப்பார்கள். இப்படி பின்தங்கி இருக்கும் பொழுது வாசகர் கடிதங்களை கண்டடைவதில் சற்று சிக்கல் (கடிதங்கள் வரிசையும், பகுதிகளின் வரிசையும் சிலசமயம் வேறு படும் என்று நம்புகிறேன்). ’நாவல்பெயர்_பகுதி’ என்று ஒரு Tag (venmurasudiscussions இல்) வரும் நாட்களில் இருந்தால் மிகவும் நல்லது.

தங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.

அன்புடன்

ராஜேஷ்

அன்புள்ள ராஜேஷ்

பார்க்கிறேன். இதுவரை அந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை. கூடுமானவரை பழைய கட்டுரை இணைப்புகளை அளிக்கத்தான் செய்கிறேன்

ஜெ

வண்ணக்கடல் பற்றி

அசுரர்
 
 

முந்தைய கட்டுரைநாஞ்சில்நாடன், பாலகுமாரன் – இலக்கியம், வணிகஎழுத்து
அடுத்த கட்டுரையூமா வாசுகி- கடிதம்