டொமினிக் ஜீவா பற்றி எம்.ஏ.நுஃமான்

அஞ்சலி:டொமினிக் ஜீவா

தனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணைப்பில், நினைவு இழப்பில் வீடு அடங்கியிருந்தார். அந்த நிலையில் ஜீவாவைப் போய்ப் பார்க்கும் மன ஓர்மை எனக்கு இருக்கவில்லை. இன்று அவரது மறைவு அதிலிருந்து அவருக்கு விடுதலை வழங்கியிருக்கிறது. கடந்த சுமார் எழுபது ஆண்டுகால ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றுடன் ஜீவாவும் பின்னிப்பிணைந்து வளர்ந்தவர். தமிழ் உலகு எங்கும் நன்கு அறியப்பட்டவர். வாழ்த்துகளும், பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர். அவருடைய வாழ்வு முழுநிறைவானது. ஒன்பது ஆண்டுகளுக்குமுன் ஜீவாவின் 85ஆவது பிறந்த நாளை ஒட்டி ஞானம் இதழில் நான் எழுதிய கட்டுரையை அவருக்கு என் இறுதி அஞ்சலியாக இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

எம்.ஏ.நுஃமான் டொமினிக் ஜீவா பற்றி எழுதிய கட்டுரை

முந்தைய கட்டுரைவெண்முரசு,வாசகனின் இடம்
அடுத்த கட்டுரைவடகரோலினா,2019