
நெடுங்காலம் நல்ல வாசகராக இருந்து, தயக்கத்துடன் எழுதத்தொடங்கி, சில தன்வாழ்க்கைச் சித்தரிப்புகளையும் நினைவு கிளர்தல்களையும் எழுதி, எழுத்தில் நுண்ணுணர்வால் துழாவிக்கொண்டே இருந்து, சட்டென்று ஒரு கதைவழியாக தன்னை கண்டடைந்து தன் எழுத்தை அமைத்துக்கொள்வது பொதுவாக எழுதத்தொடங்குப்வர்களின் பாதை. அத்தகைய ஒரு திறப்புக்கணம் ரா.செந்தில்குமாரின் ’இசூமியின் நறுமணம்’என்னும் கதை.
தொடர்ந்து எழுதிய ரா.செந்தில்குமார் ‘இசூமியின் நறுமணம்’ என்றபேரிலேயே ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிடவிருக்கிறார். அதற்கு நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரை