வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

வல்லினம் இணைய இதழ் ஒவ்வொரு ஆண்டும் முதல் இதழை சிறுகதைச் சிறப்பிதழாக கொண்டுவருகிறது. சென்ற ஆண்டு என்னுடைய யாதேவி என்னும் சிறுகதை வெளியாகியது. அது ஒரு தொடக்கம், அந்தப் பயணம் நூறுகதைகளில் முடிந்தது. இவ்வாண்டும் சிறுகதைச் சிறப்பிதழ் வெளியாகியிருக்கிறது. இவ்வாண்டின் என் முதல் சிறுகதை ‘எண்ணும்பொழுது’ வெளியாகியிருக்கிறது

ஷோபா சக்தியின் யானைக்கதை, சு.வேணுகோபாலின் ஆறுதல், ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் நிசப்தத்தின் அருகில், மலேசிய எழுத்தாளர் அ.பாண்டியனின் தூமகேது, சிங்கப்பூர் எழுத்தாளர் லதாவின் தேக்காவில் ஒரு பாலம் இருந்தது, மலேசிய எழுத்தாளர் சண்முகசிவாவின் ஓர் அழகியின் கதை, சுரேஷ்பிரதீப்பின் முடிவின்மையின் வடிவம், சுனில் கிருஷ்ணனின் பசித்திரு தனித்திரு விழித்திரு, மலேசிய எழுத்தாளர் அர்வின்குமாரின் சிண்டாய், ஸ்ரீகாந்தனின் நான்னா, மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் ஞமலி ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட படைப்பாளிகள். அர்வின்குமார், ஸ்ரீகாந்தன், ஜி.எஸ்.எஸ்.வி நவீன் ஆகியோர் இன்னமும் முகம் தெளியாத புதிய படைப்பாளிகள்.மூவரின் கதைகளுமே குறிப்பிடத்தக்க இலக்கிய படைப்புக்கள். புதியகளம் புதிய அணுகுமுறை கொண்டவை.

வல்லினம்- சிறுகதைச் சிறப்பிதழ்

முந்தைய கட்டுரைபனிமனிதன் சிறுமியின் விமர்சனம்
அடுத்த கட்டுரைமலை மாதேஸ்வரர் கோயில்