சிறுகதை எழுதுவது- கடிதம்

அன்புள்ள ஜெ

நான்‌ சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.கேள்விகள், குழப்பங்கள் நிறைந்த ஆரம்பக்கட்டம். எனது பயணம் பற்றிய  குழப்பத்திற்கு முக்கிய காரணம்: ‘ எழுதி அனுப்பிய எந்தவொரு படைப்பும் பிரசுரிக்கப்படவில்லை’.தங்களை தொடர்ந்து சில காலம் படித்ததிலேயே தோன்றியது உங்களை போல் ஒருவரின் விமர்சனம் இந்த 22 வயது இளைஞனை செதுக்குமென.தங்களால் இயலுமெனில் நான் எழுதிய ஒரு சிறுகதையை (மிகச்சிறிய) மின்னஞ்சல் செய்யட்டுமா?

ஆவலுடன்

பாலமுருகன்.

 

அன்புள்ள பாலமுருகன்

சிறுகதை எழுதுவோர் பலர் எனக்கு எழுதுகிறார்கள். கதைகளும் அனுப்புவதுண்டு

சிறுகதை எழுத எண்ணுகிறீர்கள் என்றால் தமிழில் எழுதப்பட்ட நூறு முக்கியமான சிறுகதைகளை படித்திருக்கவேண்டும். அதில் பல தேர்வுகள் உள்ளன. எஸ்.ராமகிருஷ்ணன் நூறு கதைகளை தேர்வுசெய்திருக்கிறார். நான் ஒரு பட்டியல் போட்டிருக்கிறேன்

அக்கதைகளில் பெரும்பாலானவை இணையத்திலேயே கிடைக்கும்

சிறுகதைகளின் வடிவம் குறித்து நான் சற்று விரிவாகவே எழுதியிருக்கிறேன். அதில் கொஞ்சம் பயிற்சி எடுக்கலாம்

இத்தகைய பயிற்சிகளுக்குப்பின் உங்கள் மொழியும் வடிவமும் மாறியிருக்கும். எது எழுதவேண்டிய கரு என ஒரு தெளிவு வந்திருக்கும். அதன்பின் நீங்கள் தைரியமாக எழுதலாம்

எழுத்து முதன்மையாக ஒரு மனப்பழக்கம். உங்கள் மொழியை எழுதி எழுதி சரளமாக ஆக்கிக்கொள்ளவேண்டும்

ஜெ

தமிழ்ச் சிறுகதை – திறனாய்வாளன் பட்டியல்

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

முந்தைய கட்டுரைகேளி, அறமென்ப- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழில் மெய்யியல் நாவல்கள்