ஆச்சர்யகரமான தற்செயல். மிகச் சரியாக “சூழ்திரு” கதையை வாசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுடைய குறுஞ்செய்தி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக இன்று நானும் அதிகாலையிலேயே எழுந்து விட்டது இன்னொரு ஆச்சர்யம்.
சூழ்திரு மிக இனிமையான ஒரு கதை. ஐஸக் டினேசனுடைய “பேபட்டின் விருந்து” கதையை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. சமையற்காரி பேபட் விருந்து படைக்கும் இரவில் நட்சத்திரங்கள் மண்ணில் இன்னும் கொஞ்சம் நெருங்கி வருகின்றன.
“சூழ்திரு” கதை வேறொரு கோணத்தில் கலையை, ருசியை அணுகுகிறது என நினைக்கிறேன். பேபெட்டுக்கு யாருமே காணிக்கை கொடுப்பதில்லை. இக்கதையில் காணிக்கை பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது. பணிவுடன் ஏற்றுக்கொள்ளவும் படுகிறது.
விசித்திரமும் குழப்பமும் கூடியவை இந்த கரோனா தினங்கள். புற யதார்த்தம் குலையும்போது அக அமைப்பும் பாதிப்படைகிறது. அதன் எல்லா சஞ்சலங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் உள்ளாகி வருகிறேன். மொழியால், அந்த நிலையின்மையை கடக்கவும் முயற்சி செய்கிறேன்.
http://vishalrajawrites.blogspot.com/2020/03/blog-post.html?m=1
இந்த நாட்களில் ஆழ்ந்த ஏக்கத்துடன் உங்கள் நினைவு அவ்வப்போது மேலெழுகிறது. இக்கதைகள் ஒருவகையில் அந்த ஏக்கத்தை கூட்டுபவையாகவே உள்ளன.
“அங்கி”, “விலங்கு” இவ்விரண்டு கதைகளையும் மிகவும் விரும்பி வாசித்தேன். இம்முறை பல நல்ல வாசக கடிதங்கள் வந்திருக்கின்றன. புதுமைபித்தனுடைய காஞ்சனை கதை பற்றி ஒருவர் விமர்சனம் எழுதியிருக்கிறார். நான் பல தடவை எண்ணிய கருத்து அது. (அக்கதையில் கயிற்றரவுத்தன்மை மட்டும்தான் இருக்கிறது. குறியீட்டு அர்த்தம் இல்லை). பின்நவீனத்துவ காலத்தில் நினைவின் முக்கியத்துவம் பற்றி இன்னொருவர் குறிப்பிடுகிறார். நவீன படிமங்கள் பற்றி வேறொரு கடிதம் பேசுகிறது. எல்லாமே முக்கியமான அவதானிப்புகள். அனைத்தையும் உங்களிடம் நேரில் பேசி விவாதிக்க வேண்டும் என தினமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய வாழ்த்து என்பது எப்போதும் ஆசீர்வாதம் தான்.
நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
விஷால்.
Dear Je
The enclosed photo is taken from the book entitled ‘The Principles of Neural Science, lead author Eric R Kandel (Nobel laureate). It was an extreme story. Waiting for our fellows wide view.
எனக்கு தெரிந்த கொஞ்சமே கொஞ்சம் நரம்பியலை வைத்து சொன்னால், நீங்கள் நரம்பியல் சம்பந்தமாக எழுதும் அனைத்திலும் இது போல் சர்வதேச நரம்பியல் ஆராய்ச்சியாளர்களிn வார்த்தைகளோடு பத்துக்கு பத்து பொருத்தமும் இருக்கின்றது. நீங்கள் ஆகும்பே சென்ற பயணத்தில் உருவான கருவென்று நினைக்கின்றேன். மிகப் பெரிய நன்றி.
எவனாவது சில்லறை வந்து இப்படியெல்லாம் நடக்கும்ம்மாவென்று ஏதாவது கேட்டால், இங்கே அனுப்புங்கள். Acetylcholine subunit receptor mutation (CHRNA4 and CHRNB2) and epigenetics என்று பேசி கடிச்சு வைக்க
சுவே
அன்புள்ள சுவே
உண்மையில் இக்கடிதத்தை இப்போதுதான் பார்த்தேன். இந்த கதையை ‘அறிவியலுக்குப் புறம்பானது’ என்று ஒருவர் வெறியாவேசத்துடன் எழுதியிருக்கிறார்
ஜெ