கதைகளை நினைக்கையில்…

அன்புள்ள ஜெ,
நான் 2020 ஆண்டு முடிவில் என் டைரியில் நூறுகதைகளின் ஆண்டு என்று எழுதி வைத்துக்கொண்டேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகில் என்னை சுழற்றியடித்தன. என் மனசில் மூதேவி என்ற வார்த்தையின் அர்த்தமே மாறிப்போனது. தெய்வங்கள் என்றால் எங்கோ இருப்பவை என்பது மறைந்து நமக்குள் இருப்பவை, நம்மில் தேவையின்போது நம்மை மீறி எழுபவை என்ற எண்ணம் வந்தது. என் வாசிப்பில் நான் முழுமையாகவே தோய்ந்து வாசித்தவை நூறுகதைகளும். எனக்கு அவற்றை வாசிக்க இருநூறுநாட்களுக்குமேல் ஆகியது. ஒரு முழு ஆண்டும் அதிலேயே முழுமை அடைந்தது

அர்விந்த் மகாதேவன்

அன்பின் ஜெ.
இன்று ராஜன் கதை படித்தேன்.நல்ல அரசியல் கதையும் கூட.பூதத்தான் நாயரிடம் மனது நின்று விட்டது.

நீங்கள் எனது முகநூல் பதிவிற்கான கடிதத்தில் கேட்டது போல, என்னிடம் அடிமனதில் இருக்கும் வெறுப்பு என்ன எனக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.அது நீங்கள் நிற்கும் அரசியல் பொருளியல் நிலைகள் எனப் புரிந்து கொண்டேன்.

ஒரு காலத்தில் ஒரு சாதாரணன் தலைவனாக எழுந்து வந்த போது, ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவேன் எனச் சொன்னான்.அவனின் அரசியல் எதிரிகள், ஏன் மூணு படி போடேன் என்றார்கள்.அவனுக்கு வாய் அதிகம், ‘ மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’. என்றான்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பின்புதான் தெரிந்தது. அதைச் செயல்படுத்தத் தேவையான கட்டமைப்பு 3 நகரங்களில் மட்டுமே இருந்தது.அடுத்த வந்த ஆள், அந்தக் கட்டமைப்பை தமிழகமெங்கும் உருவாக்கினார்.  நான் சிறுவனாக இருந்த போது, அரிசியும், கோதுமையும், சர்க்கரையும், மண்ணெண்ணையும் வாங்கியிருக்கிறோம். எங்கள் வீட்டில் பூரியும், சப்பாத்தியும் வந்தது அப்படித்தான்.

அதற்கப்புரம் 20 ஆண்டுகளில் கழித்து, அரிசி 2ரூபாய்க்கும் பின்னர் இலவசமென்றும் வந்தது. முதல் தலைவன் சூளுரைத்த 40 ஆண்டுகளுக்குப் பின். இமயத்தின் ஒரு கதையில், மாலை ஒவ்வொரு வீடாகப் போய் உணவுக்காக தட்டேந்தும் வண்ணாரப் பெண் பற்றி நண்பர் வெங்கி சொன்னார். அதை இன்னும் படிக்க வில்லை. ஆனால், அந்தக் கதை இனிமேலும் சாத்தியமில்லை என்பது எனக்குப் புரிந்தது. என் அப்பாவுக்கு, கையெழுத்துப் போடும் அளவுக்குச் சொல்லிக் கொடுத்த பறையர் வாத்தியார், வருடத்தில் சிலமுறை வந்து, தன் வேட்டியில் தவசம் (தானியம்) வாங்கிக் கொண்டு போனதைச் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அவர் உடல் மொழி இன்னும் மனதில் இருக்கிறது. இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் என் அப்பா முன் அப்படி நின்று பிழைத்திருக்க வேண்டியதில்லை என்பது இன்றைய நிஜம்.அது ஒரு தரப்பு.

ஆனால்,  அறிவின் மொழிபோலத் தோன்றும் ‘சோ ராமசாமியிசத்தில்’ மயங்கித் தெளிந்த போது புரிந்து கொண்டேன் – அது இன்னொரு தரப்புஇரண்டு தரப்புகளும் என்றுமே மாறாது போல.கடந்த சில வாரங்களில், நீங்கள் கேட்ட கேள்வியை யோசித்துக் கொண்டேயிருந்தேன். கொஞ்சம் போலத் தெளிவு கிடைத்தது.

உங்கள் கதைகளின் தளமும், அவற்றின் விரிவும், நுட்பமும், அதில் நான் கற்றுணரும் விஷயங்களும் ஒரு வாசகனாக என்னைப் பெரும் சுகானுபவத்தில் ஆழ்த்துகின்றன. என் அரசியல் நிலைகளை மேலும் உறுதி செய்கின்றன. அவற்றைப் படைத்தமைக்காக உங்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.

பாலசுப்ரமணியம் முத்துசாமி

Dear Jeyamohan

Stories spinning around Guru Nitya’s ashram and the disciples are the best. ‘Sivam”  is about the “dharma” of when to save a life and when to let go. Amazing description of Varanasi. Your interpretation of the spiritual roots that are holding Varanasi with its past that nourish the new developments be it a new ruler, cultural or technological interventions is the best. The other stories where you bring out the views of the monks and Guru Nitya’s interpretations are great.

Yesterday I read “Karu”. Seven years in Tibet is my favorite book and movie. Visited monasteries in Sikkim and Bodh Gaya more as a tourist without any philosophical inclination.  The historical facts, seekers, and the books that you have introduced in the story made me to rush to google to learn more about those personas.  Actually, I journeyed with Mukta to those yonder mountains, valleys, villages and almost touched Shambala!

Your research and efforts kindle interest to read,learn and seek. The characters walk thru their experiences holding one’s hand. Thanks for your tireless writing. Happy to see the little birdies are getting ready to fly.

Warm regards
Sobana Iyengar

திரு ஜெ,
தற்போது வெளியாகும் கதைகளைப் படித்ததும் மேல் அதிக தகவல் களுக்கு  கூகிள் செய்வது வழக்கம். இந்திய சுதந்திர தினத்தன்று கொடி ஏறியதும் ராச ரத்தினம் பிள்ளை அவர்களின் நாதஸ்வரம் இசைத்தது, சிலப்பதிகார காலத்தில் உள்ள இட முறை, வல முறை வாசிப்பையும், நாதஸ்வர வடிவத்தை மாற்றியமைத்தது, தமிழிசை வளர்த்தது என மேல் அதிக தகவல் களுக்கு தேனீ கதை வாசிப்பு உறுதுணையாக இருந்தது.

அன்புடன்
சேது வேலுமணி,
ஜக்தால்பூர்.

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைதுரியோதனன் காதல்
அடுத்த கட்டுரைமுருகவேலன்- கடிதம்