எழுதுவது- கடிதம்

எழுதும் கலை நூல் வாங்க

அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம்

எனது பெயர் சு. இசக்கியப்பன். எனது பெயரே சொல்லும் எனது சொந்த ஊர் எதுவென்று.

வேலை நிமித்தம் தற்பொழுது ஓசூரில் வசித்து வருகிறேன் சிறுகதைகள் மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு. இதுவரை எனக்கு தெரிந்த மாதிரி மூன்று கதைகள்  எழுதியுள்ளேன்.  மற்றும் ஹைக்கூ கவிதைகள் எழுதுவேன் எதுவும் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை.

என்னை போன்று எழுத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தாங்கள் சிறுகதை மற்றும் கவிதை எழுதுவதை பற்றி ஒரு இணயவழி பயிலரங்கம் அமைத்துக் கொடுத்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ….

தங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்

நட்பும் பாசத்துடன்

உங்கள் அன்பு தம்பி

சு.இசக்கியப்பன்

ஓசூர்

***

அன்புள்ள இசக்கி

ஓசூரின் வரண்ட காட்டில் இருந்தாலும் நம்மூர் காற்றும் அங்கு வீசட்டும்

இலக்கியத்தை எழுத அகத்தூண்டல்தான் முக்கியமானது. அது வாழ்க்கை அனுபவங்களை கூர்ந்து கவனிப்பது, நல்ல இலக்கியங்களை தொடர்ந்து வாசிப்பது ஆகிய இரண்டினூடாகவே அமையும்

அதற்கு அப்பால் பயிற்சி என்பது கதை கவிதை கட்டுரைகளின் வடிவம் பற்றிய அறிமுகமும் சில பிழைகளை சுட்டிக்காட்டி திருத்துவதும்தான். அதை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கிறேன்

எழுதும்கலை என்னும் சிறுநூல் வெளிவந்துள்ளது. பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அரங்குகளை நடத்தியிருக்கிறேன். மலேசியா சிங்கப்பூரில் அதற்கான அமைப்புக்கள் உள்ளன

இங்கே நானே இளம்வாசகர் சந்திப்பு என்றபேரில் அதைத்தான் நடத்துகிறேன். அவ்வாறு வந்து கலந்துகொண்ட பலர் இன்று அறியப்பட்ட படைப்பாளிகள்

கொரோனா முடிந்தபின் பார்ப்போம்

ஜெ

எழுதுவதுபற்றி…

மீண்டும் புதியவர்களின் கதைகள்

நாவல் – ஒரு சமையல்குறிப்பு

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

சிறுகதையின் திருப்பம்

‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்

நல்ல கட்டுரையில் …

கதைத்தொழில்நுட்பம்:ஒருபயிற்சி

முந்தைய கட்டுரைதிருமணம்
அடுத்த கட்டுரைவிசும்பின் மூன்று கதைகள்- கடிதம்