குணங்குடியார்

இனிய ஜெயம்

ஜெயகாந்தனுக்கு பிடித்த குணங்குடியார் பாடலான மீசையுள்ள ஆண்பிள்ளை சிங்கங்காள் பாடல் பிரமாதமான பின்னணி இசையுடன் you tube இல் காணக் கிடைக்கிறது.

குமரி அபுபக்கர் அவர்கள் குரலில் இந்தப் பாடல்கள் மேலும் அர்த்தமும் ஆழமும் கொள்வதை போல மயக்கம் தருகிறது. மூன்றாவது பாடல் இருக்கும் தளம் ar ரஹ்மான் அவர்களின் அறக்கட்டளை உடையது என டிஸ்க்ரிப்ஷன் சொல்கிறது.

மீசையுள்ள பாடலின் வரிகள் மொத்தமும், ஜெயகாந்தன் தானே எழுதியதாகவே உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். தமிழ் தி இந்து பதிப்பகம் வழியே ஜெயகாந்தன் நினைவு மலர் ஒன்று வந்தது. அதில் ஒரு அரிய புகைப்படம் கண்டேன். மேல் சட்டை இன்றி, வேஷ்டியை மடித்துக் கட்டி, துண்டை வீசி நடனமாடிக் கொண்டிருக்கிறார் ஜெயகாந்தன்.

அவர் யார் முன், என்ன பாடல் பாடியபடி நடனமாடிக் காட்டி இருப்பார்? தெரியவில்லை. இன்று இந்த மீசையுள்ள ஆண்பிள்ளை பாடலை, பின்னணி இசையுடன்  கேட்ட பிறகு, இதை பாடியே ஜெயகாந்தன் ஆடி இருப்பார் என கற்பனை செய்து கொள்ள

தோன்றுகிறது. :)

இது சென்னையில் மூன்று சித்தர்கள் எனும் தலைப்பின் கீழ், ஆறுமுக தமிழன் அவர்கள், யார் சித்தர் என்பதை விளக்கி, பட்டினத்தார், வள்ளலார், குணங்குடி மஸ்தான் இந்த மூவரும் அவர்கள் தங்களை முன்வைத்த விதத்தை ஒப்பு நோக்கி, நிகழ்த்திய உரை.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதெய்வம்- கடிதம்
அடுத்த கட்டுரைஎழுத்தாளனும் வாசகனும்