போகன் சங்கருக்கும், சங்கர் கணேஷுக்கும் கண்ணதாசன் விருது

எழுத்தாளர் போகன் சங்கருக்கும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷுக்கும்  2020 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது வழங்கப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் நினைவாக கோவையில் இருந்து வழங்கப்படும் இவ்விருது ஒரு திரைக்கலைஞருக்கும் ஓர் இலக்கியவாதிக்கும் வழங்கப்படுகிறது.

 

இவ்வாண்டுக்கான கலை விருதைப் பெறும் சங்கர் கணேஷ் என் விருப்பத்திற்குரியவர். ஆச்சரியமென்னவென்றால் நேற்று மாலைதான் நான் குழந்தைகளுடன் அமர்ந்து சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல்களை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.எனக்குப் பிடித்தமான பல பாடல்கள் அவருடையவை. நான் என் பள்ளிப்பருவத்தில் கேட்ட ‘செந்தாமரையே செந்தேனிதழே’ முதல் ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது’ வரை

 

போகன் சங்கர் தமிழில்  அடுத்த தலைமுறையினரில் அன்றாடஉலகியல் – அரசியல் என்பதற்கு அப்பால் செல்லும் படைப்புக்களை எழுதும்  மிகமிகச் சிலரில் ஒருவர் மேலையிலக்கியம் அறிந்தவராயினும் அதன்மீது மிகையான மோகம் கொண்டு பின்தொடர முயலாதவர்- அதுவும் நவீன தமிழிலக்கியத்தில் தலைமுறைக்கு ஒருவர் இருவர் அன்றி பிறரிடம் காணாத இயல்பு.

 

போகன் சங்கர், சங்கர் கணேஷ் இருவருக்கும் வாழ்த்துக்கள்

[email protected]  போகன் சங்கர்

 

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் 2020.

இசையமைப்பாளர் (சங்கர் )கணேஷ் படைப்பாளர்போகன் சங்கர் ஆகியோருக்கு கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் 2020.வழங்கப்படவுள்ளன.

 

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும். ஜூன் மாதம் இந்த விழா நிகழும். தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த விருதினை கண்ணதாசன் கழக நிறுவனர் திரு.வி. கிருஷ்ணகுமார் நிறுவியுள்ளார்.

இதற்கு முன் கண்ணதாசன் விருது பெற்றோர் விபரம்:

எழுத்தாளர்கள் திரு.அசோகமித்திரன்,திரு.வண்ணதாசன்,திரு.ஜெயமோகன்,கவிஞர் சிற்பி,திரு.கலாப்ரியா,திரு.நாஞ்சில்நாடன்,திரு.எஸ்.ராமகிருஷ்ணன், திரு.மாலன் திரு. சாரு நிவேதிதா ஆகியோர்.

 

கலைத்துறையில் பாடலாசிரியர் முத்துலிங்கம், பாடகர்கள் திருமதி.பி.சுசீலா, எல்.ஆர் ஈஸ்வரி திருமதி .வாணி ஜெயராம், திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம், திரு.பி. ஜெயச்சந்திரன் திரு.சீர்காழி சிவசிதம்பரம்,திருமதி. டி.ஆர்.எம்.சாவித்திரி பதிப்பாளர் திரு பி.ஆர்.சங்கரன்,கவிஞரின் உதவியாளர் திரு.இராம.முத்தையா ஆகியோர்

 

-மரபின் மைந்தன் முத்தையா
அமைப்பாளர்
கண்ணதாசன் கழகம் கோவை

முந்தைய கட்டுரைஎண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –4