மீண்டும் கங்கைக்கான போர்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

நீர் நெருப்பு – ஒரு பயணம்

நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு

கங்கைப்போர் முடிவு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

சுவாமி ஆத்மபோன்ந்த்.ஒவ்வொரு முறை இந்த பெயரை நினைக்கும் போதே மனம் எல்லாம் அதிர்ந்து கிடக்கும்,27வயது இந்த இளம் மனிதனின் முகம் அதில் நிரம்பி இருக்கும் வைராக்கியம் மிகப்பெரியது.கங்கை நதியை பாதுகாக்க 48 நாட்கள் நீர் கூட அருந்தாமல் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் இவர் எங்கள் அனைவரின் தூக்கத்தையும் கலைத்து போடுபவர்.

ஏற்கனவே நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு புத்தகத்தின் வழியே இவரைப்பற்றியும் இந்த நீண்ட நெடிய போரத்தில் உயிர் துறந்த மற்ற துறவிகள் பற்றியும் எழுதி இருந்தாலும்,கடந்த இரு மாதமாக இவர்கள் அனுபவிக்கும் துயர்கள் எங்கள் மனதை இன்னும் நிலைகுலைய செய்கிறது.

இவருடன் சக பெண் துறவி சாத்வி பத்மாவந் அவர்கள் தனது 71வது நாள் உண்ணா விரதத்தில் இருக்கிறார். இவரின் அதிகபட்ச உணவு எலுமிச்சையும் தேனும் கலந்த ஒரு டம்ளர் நீர் மட்டுமே அதுவும் இரு வேளை என மனது திரும்ப நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

.ஆனால் அவர்கள் முன்னெடுத்து இருக்கும் இந்த போரட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்த்தது,இந்திய நிலத்தின் உயிர் நாடியான கங்கை நதியை.எப்படியாவது காப்பாற்றி விட முடியாதா,தனது குருவுக்கு ஒரு புள்ளி மனநிறைவையாது அளிக்க இயலுமா என சற்றும் மனம் சலிக்காத வேதாளத்தை போல மீண்டும் மீண்டும் இந்த அரசிடம் போராடி தோற்றுக் கொண்டே உள்ளனர் இந்த மாத்ரி சதன் அமைப்பினர்.

கங்கை நதிக்கிரையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த எளிய ஆசிரமத்தின் நுழைவாயிலின் அருகே அமர்ந்து அதன் குரு சிவானந்த அங்கு வரும் அனைவருக்கும் அவர்களின் இந்த போரட்டத்தை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் ஒரு வரி விடாமல் திரும்ப திரும்ப பேசிக்கொண்டு இருந்த அவர்,இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் காத்து கொண்டு இருக்கின்றார்.மீண்டும் மீண்டும் ஒரு சொல்லிலோ எழுத்திலோ இந்த அறப்போரட்டத்தை பற்றி மேலும் அவர்களின் ஒரு நாளில் ஏற்படும் துயர்களையோ வெளி உலகத்திற்கு சொல்லி விடமுடியாது.இன்று உலகமே உற்று கவனிக்கும் மிக முக்கிய தொடர் போரட்டத்தினை முறியடிக்க நடக்கும் செயல்கள் மனதை உச்சபட்ச பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது.

நீங்கள் மற்றும் வாசகர்கள் உங்கள் தளத்தில் எழுதி இருந்த கட்டுரைகள் தாண்டி,இன்று வரை தமிழ்ச் சூழலில் இது குறித்து யாரும் எதுவும் எழுதவோ பேசவோ விவாதிக்கவோ இல்லை.ஒரு ஆண்டு இல்லை இரு ஆண்டு இல்லை தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக கங்கை நதிக்கரையின் மிக முக்கிய பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளில் இருக்கும் கல்குவாரிகளை மூடச்சொல்லியும்,தொடர்ந்து இராசயனக்கழிவுகளை கங்கை நதியில் கலப்பதை தடை செய்யக்கோரியும் போராடி வருகின்றனர்.இன்னும் முக்கியமாக தேவையற்ற தடுப்பனைகளை வர விடாமல் தடுக்கவும் சட்டரீதியாகவும் மிக முக்கிய பணியினை செய்து வருகின்றனர்.

சென்ற ஆண்டு ஆத்மபோனந் அவர்கள் இந்த கோரிக்கைகளுக்காக விரதம் இருக்க துவங்கி 127 நாட்கள் கடந்து இருந்த சமயம் ,நாங்கள் அனைவரும் அங்கு  இருந்தோம்.ஊர் திரும்பும் போது அவரைமீண்டும் பார்க்க முடியுமா என்ற கனத்து கிடந்தது மனது.பிறகு அவரின் இந்த உன்னா நோன்பு  197வரை நீடித்து அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடியான பின்பு,கங்கை நதிக்கான பாதுகாப்பு கவுன்சில் எழுத்து பூர்வமாக கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்தனர்,அதனால் பெரும் மனநிறைவுடன் இருந்தோம்.ஆத்மபோனந் உடல் ஈரிதியாக மீண்டுவர பெரும் மெனக்கிடலுக்கு உள்ளாகி இருந்தார்.

அடுத்த மாதத்தில் சில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டன.இரு அணைக்கட்டுகள் கட்டும் பணி முற்றிலும் நிறுத்திவைக்கபட்டது.ஆனால்,பெரும் கார்பரேட் நிறுவனங்களின் கைப்பிடியில் இருக்கும் கல்குவாரிகளை அதனால் உருவாகும் சூழல் சீர்கேடுகளை தடுக்க இயலவில்லை.மாத்ரி சதன் ஆசிரமவாசிகள் அனைத்து அரசு இயந்திரங்களுக்கும் தொடந்து கடிதங்கள் மற்றும் எல்லா வழி முறைகளிலும் நெருக்கடி கொடுத்தனர்,எதுவும் நடக்கவில்லை,மீண்டும் அதே சூழல்.

இம்முறை சாத்வி பத்மாந் எனும் 23வயதே நிரம்பிய இளம் பெண் துறவி அந்த குருவிற்கு பதில் உண்ணா விரத போராட்டத்தை துவங்கிவிட்டார்.கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாக ஆரம்பித்தார்,சிலவற்றை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.ஆசிரமத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நாளில் சுவாமி ஆத்மபோன்ந்த் விரதம் இருக்க துவங்கி விட்டார்.கடந்த ஜனவரி 22ம் தேதி அன்று உள்ளூர் அதிகாரிகளால் கடுமையான நெருக்கடிக்கு ஆட்படுத்தப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.தொடர்ந்து வளாகத்தில் தொடர் பரிசோதனைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.மேலும் அன்று முதல் ஆத்மபோனந்த அவர்களுக்கு நரம்பின் வழியே நீர் உணவு அளித்து வருகிறார்கள்.

அனுதினமும் பிரதம மந்திரி,உத்ராகண்ட் முதல் அமைச்சர் ,டெல்லி முதல் அமைச்சர் மற்றும் பிற உயர்மட்ட குழுக்களின் தலைவர்கள் என அனைவருக்கும் தங்கள் தரப்பு நியாத்தையும் ஒரு பாதுகாப்பு கூட இன்றி இருப்பதை கடிதத்தின் வழியே மிகுந்த ஆதங்கத்துடன் தெரியப்படுத்தி உள்ளனர்.நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து அவர்களை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.நரம்பின் வழியே உணவு அளிப்பதும் கடந்த 72மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டுள்ளது.மிக மோசமான உடல் நிலையில் இருக்கும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்து அந்த மருத்துவமனை வெளி வளாகத்தில் போரட்டத்தை தொடர்கிறார், டெல்லியின் கடுங்குளிரில் இருக்கும். அவரின் இந்த புகைப்படக்காட்சி மனசாட்சியை குடைகிறது.

நீர் என்பது அவர்களுக்கு வெறும் நீர் அல்ல அதையும் தாண்டிய ஒன்றாக அவர்கள் பரிபூரணமாக நம்பி கைத்தொழுகிற இறையாகவே இந்த கங்கை நீரை உணர்கிறார்கள்.தங்கள் கடமையாக தான் இந்த பாதுகாக்கும் செயலையும் செய்கிறார்கள்.அவர்கள் மெனக்கெடுவது இந்த தேசத்தின் அத்தனை மக்களுக்காக தான்,ஆனால் எத்தனை மக்களுக்கு இந்த உண்மை புரியும் அல்லது குறைந்த பட்சம் எவ்வளவு பேர் கவனத்தில் இந்த செய்தி சென்று சேரும் என தெரியவில்லை,ஆனால்இந்த தேசத்தின் இந்த கடைக்கோடியில் அமர்ந்திருக்கும் நாம் அணுஅணுவாய் தண்ணீருக்காக தன்னுயிரை கொடுக்கும் இந்த மக்களை தினம் ஒரு முறையாவது நினைத்து கொள்ள வேண்டும்.

அத்தனை இக்கட்டையும் தாண்டி இந்த உண்ணாவிரதம் தொடர்கிறது, இவர்கள் இந்த காரியம் கைகூடும் என நம்பிக்கையுடன் போராடுவது பெரும் வியப்பளிக்கிறது.இயற்கை இவர்களை உறுதியாக காத்து அருளும்… சென்ற ஆண்டு இதே நாளில் தான் நாங்கள் நணபர்கள் 15பேர் இந்த மனிதர்களை சென்று தரிசித்து வந்ததை திரும்ப திரும்ப நினைத்து கொள்கிறோம்.வரும் தலைமுறை இந்த தியாக மனிதர்களை இலட்சியவாதிகளை நிச்சயம் அடையாளம் கண்டுகொள்வார்கள் என உள்ளுணர்வு ஏதோ நம்பிக்கை கொள்கிறது..

ஸ்டாலின்

கள்ளிப்பட்டி

குக்கூ மற்றும் தன்னறம் நண்பர்கள்

=========================================================================================================

கங்கைக்கான போர் -கடிதம்

கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…

கங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்

கங்கைப்போர்- கடிதங்கள்

கங்கைக்கான போர் -கடிதங்கள்

கங்கைக்கான போர் – ஓர் ஆவணப்படம்

அபிராமானந்தரின் கங்கை

வாழ்நீர் – கடலூர் சீனு

கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…

முந்தைய கட்டுரைநாஞ்சில்நாடன்
அடுத்த கட்டுரைதானென்றாதல்