நூறுநாற்காலிகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நூறு நாற்காலிகள் ஒரு மனவெழுச்சியின் உச்சநிலை!!!! புறவயமான சாதீய அடயாளங்களை, வாழ்வு நியதிகளை நீக்கி விட்டுப்பார்த்தால், ஆதி மனிதனின் தூய உணர்வுகள் வெளிப்படுவதை உணரலாம். “அம்மா”வில் ஒரு பறவை தன் குட்டியை அடைக்காக்கும் உணர்வு என்னை அதிரச்செய்தது!
சமூக கோட்பாடுகளால் மூடப்படாத, களங்கமடையாத,புரிந்துகொள்ள முடியாத நிலை.
உணர்ச்சிப்ரவாகமாய் பெருக்கெடுத்து ஒடும் நடையும், வாழ்வின் பெருங்கூச்சலோடும் முட்டி மோதும் பாத்திரங்களும்………..

என்ன எழுதினாலும்…. அது சம்பிரதாயமாகவே இருக்கும்…..
ஆன்மாவை அடித்த ஒரு வலி………
சதீஷ் (மும்பை)

அன்புள்ள சதீஷ்

நன்றி

ஒரு தீவிரமான மனநிலையில் இருந்து எழுதியபின் நான் இறங்கிவிட்ட கதை அது. பிறிதொருமுறை வாசித்துத்தான் அது என்ன என்று நானே பார்க்கவேண்டும்

ஜெ

அன்புள்ள ஜெமோ,

நிறைய விஷயங்கள் மனதில் அலை மோதுகின்றன.. முடிந்தவரை
சுருக்கமாக சொல்கிறேன்..

1 நீங்கள் நம் மக்களைப்பற்றிய அதிக நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்.
சினிமாவைப்பற்றிய சாதாரணப் பதிவுகளுக்கு வந்த வருகையாளர்களில்
முக்கால்பங்கினர்கூட இக்கதைகளுக்கு வரவில்லை.

எங்கேயோ கேட்ட உதாகரணம்.. ஊர்க் குளத்தில்தான் ஏராளமான
காக்கைகள் இருக்கும்.. மானசரோவரில் ஹம்ச பட்சிகள் வெகு
சிலவே உலவும். (அ) எல்.கே.ஜி வகுப்பில் லட்சக்க்கணக்கில்
சேருவார்கள்.. பி.ஹெச்டி. படிப்பவர் சில நூறு மட்டுமே..
உங்களின் இக்கதைகளை சாமான்யர்களால் புரிந்து கொள்ள முடியாது
மேலும் ஊர் முழுக்க இருப்பது துரித உணவு மனங்கள்.. தத்துவம்,
அறம் புரிந்து கொள்ளும் பொறுமையும் அறிவும் இல்லை..

பல வருடங்களாக உங்களைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
ஆனால் இது நான் எழுதும் இரண்டாவது மடல் மட்டுமே.. உங்களின்
இந்தக் கதைகளை நானும் என் நண்பர்கள் 6 பெரும் படித்துக் கொண்டு
இருக்கிறோம்.. நான் ஒருவன் மட்டுமே ஒரே ஒரு கடிதம் எழுதுகிறேன்..

எழுத்து என்பது அலை அலையாய் எங்கெங்கோ ஏதேதோ அதிர்வுகளை
உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது.. ஆனால் அவைகளை எழுதியவன்
அறிய சந்தர்ப்பங்கள் வெகு குறைவு..

2 எழுதத்தானே முடிகிறது என்று சிலசமயம் தோன்றும். ஆனால்
எழுத்துமூலம் மட்டுமே ஏதேனும் செய்யமுடியும் என்றும் தெரிகிறது.

அவரவர்க்கென சில விஷயங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.. ப்ராரப்தம்..
நீங்கள் எழதுவதற்கென படைக்கப்பட்டு இருக்கிறீர்கள்.. எழுதுங்கள்..
எழுத்து என்பது இருளில் காட்டில் எறியப்படும் ஈட்டிகள் போல..
உள்ளே என்ன சேதம் என்று எரிந்தவனுக்கு தெரியாது.. எழுத்து உங்கள்
வரம்.

3 இந்த சமூக அநீதிகளின் அடித்தளம் ஆதிக்க வர்க்கமோ அதிகாரமோ
ஒன்றும் அல்ல. சமூகத்தின் கூட்டு மனநிலைதான். அது நியாயப்படுத்தி
வைத்திருக்கும் விஷயங்கள்தான். அதன் சமகால சமூக அறம்தான்

அற்புதம். ஹிட்லர் காலத்தில் நடந்த விஷயங்கள் தனிப்பட்ட ஒருவனின்
அட்டூழியம் மட்டுமல்ல .. ஒரு கூட்டு மனநிலையின் வெளிப்படும் கூட
என எங்கோ கேட்டிருக்கிறேன்..

வெகு ஆழமான விஷயங்களை போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறீர்கள்..

உங்களின் ஒவ்வொரு கதைப்பற்றியும் பத்து பக்கம் எழுத எண்ணங்கள் உண்டு..

எண்ணங்களை வார்த்தைகளைக்க முயற்சிக்கிறேன்..பின்னொரு சமயம்..

ப்ரியங்களுடன்

மகேஷ்.

அன்புள்ள மகேஷ்

நன்றி

ஒரு கதை சிந்தனைகளை முன்வைக்கக்கூடாது, உருவாக்கவேண்டும் என்பார்கள்.

இந்த சிந்தனைகள் வழியாக உங்கள் மனம் சென்றிருக்கிறது என்பதே கதையின் நோக்கமும் கூட

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

ஒரே மூச்சில் நூறு நாற்காலிகள் வசித்து முடித்தேன்.

அற்புதம் ! அபாரம் ! இதைத்தவிர வேறொன்றும் தோணவில்லை.

நான் சிறுவயதிலிருந்து கல்கண்டில் சங்கர்லால் துப்பறிகிறார் தொடங்கி தமிழ்வாணனின் ஆயிரம் கண்கள், குமுதத்தில் சாண்டில்யணின் கன்னிமாடம் என்று தொடங்கி பலவருடங்களாக தமிழில் தொடர்ந்து பல ஆசிரியர்களின் படைப்புக்களை கண்டு வருகிறேன்.ஆயினும் உங்கள் எழுத்து வித்தியாசமாக, இதுநாள்வரை கண்ட படைப்பாளிகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.அது என்னவென்று விளக்கமாகவோ குறிப்பிட்டோ சொல்லத்தெரியவில்லை. இதமா, நெகிழ்வா, சங்கடமா,என்னவுணர்வு என்று அறிய இயலாமல் படிக்கும்போது கண்களில் பனித்திரை கட்டி மனம் கனமாகிறது.

எப்படி முடிகிறது இதுபோல் எழுத ? தமிழை கரைத்துக்குடித்த ஜாம்பவான்களை விட இன்றும் மலையாளவாடை அகலாமல் கூர்மையாக வார்த்தைகளை கொட்டி இதுபோல் தமிழை பிரயோகம் செய்ய எப்படி முடிகிறது ? ஏதாவது வரம் வாங்கிவந்திருக்கிறீர்களா ? காளிதாசனின் நாக்கில் எழுதியதுபோல் ஏதும் அனுபவம் உண்டோ ?

அன்புடன்

கெ.குப்பன்
சிங்கப்பூர்

அன்புள்ள குப்பன்

ஆம், நாக்கில் எழுதியது காளி -காளிவளாகத்து விசாலாட்சி அம்மா))

நான் தூயதமிழில் கொற்றவை எழுதியிருக்கிறேன். தமிழ் தூய்மையாகும் தோறும் நல்ல மலையாளம் நோக்கி நகரும் என்பது என் எண்ணம்

ஜெ

அன்புள்ள ஜெ,
ஒரு காட்டாறு போல கதைகளை எழுதி வாசகனுக்கான பசியைத்தீர்த்து வருகிறீர்கள். எல்லாக் கதைகளுமே ஒரு குறு நாவலைப் போல நீண்டாலும் சிறுகதை என்ற கட்டுமானத்திலிருந்து மாறவில்லை.

நூறு நாற்காலிகள் அந்நியர்களுக்குக் குறிப்பாக மலேசியர்களுக்குப் புதிய களம். இங்கே சாதிப் பிரிவினை வெளிப்படையான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை- இந்தியாவைபோல. சாதிமை ,தீண்டாமை, மதியாமை பற்றிய மிக அற்புதமான பதிவு’ நூறு நாற்காலிகள்’. அம்மா என்ற புனித பிம்பத்தை உடைத்தெறிந்த கதை இது.

அம்மாவை அரவணைக்கவேண்டும் என்று அவன் முயற்சி மேற்கொள்ளும் போதெல்லாம் அம்மாமேல் வாசகனுக்கு கோபம் வருகிறது. அப்போது அவன் படும் அவமானங்களின் மீது பச்சாதாபம் பிறக்கிறது. அவனிடம் எஞ்சிய பாசம் ,தன்னை வளர்த்து ஆளாக்கி , தனக்கு முற்றிலும் வேறொரு வாழ்வை அமைத்துத் தந்த குருவின் ஆலோசனையால், அம்மாவால் அவன் எவ்வளவு அவமானப் பட்டும் மீறமுடிவில்லை. அப்படிப்பட்ட அம்மாவை நாமும்தான் தூக்கித் தெருவில் எறிந்துவிடுவோம் என்கிற நிதர்சனத்தை மிகக் காத்திரமாக நிறுவுகிறது கதை.

தீண்டாமையின் புறக்கணிப்பை மிக நுட்பமாக சொல்லிச்செல்கிறது கதை. ஒரு கீழ்ச்சாதிக்காரன் ஒரு நிறுவனத்துக்கு மேலதிகாரியாய் வந்தாலும் அவனுக்கு நேரும் மதியாமையை , கீழ்ப்படியாமையை இந்தியாவின் சாபக்கேடு என்பதை . உலக மக்களுக்குத் தெளிவாகக் காட்டிச் செல்கிறீர்கள்- இந்தக் கதையிலும்.
ஒவ்வொரு கதையும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது- மனதைப் போட்டுப் பிசைகிறது. ஒன்றை இன்னொன்று மிஞ்சிக்கொண்டே போகிற சிறுகதைகள் உங்களுடையது.

கோ.புண்ணியவான், மலேசியா.

http://kopunniavan.blogspot.com

அன்புள்ள புண்ணியவான்

நலம்தானே?

இன்றும் இங்கே நீடிக்கும் ஒரு வாழ்க்கைச்சித்திரமே அந்தக்கதையில் உள்ளது. இன்றும் இதே நாகர்கோயிலில் பலநூறு மனிதர்கள் நடுத்தெருவில் திறந்த வெளியில் வாழ்கிறார்கள்

கதை அந்த உண்மையை செரித்துக்கொள்ளும் மனசாட்சியைப்பற்றிப் பேசுகிறது

ஜெ

அன்பின் ஜெ,

நன்றி. உண்மைகளும் உணர்ச்சிகளும் கலந்த கதை. உங்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைக்க முயல்கிறேன். முடியவில்லை.

உங்கள் எழுத்தின் தீவிரம் கண்டு ஆச்சரியம் அடைகிறேன். ஆனால் இக்கருத்துக்களை பலர் படித்து உணர, தெளிய முடியாத அளவுக்கு you are so unpopular. I am worried we the Tamil Society losing out a lot of wisdom because of the unpopularity. May be whatever you are saying would have been said before, but we understand you better because we can easily relate to your writings and that too without interpretation.

அனைவரின் உள் மனதில் உணரும் ஆனால் பொதுவெளியில் பேசாப்பொருளை பேசும் வல்லமை, வன்மைக்கு வந்தனங்கள்.

செம்மையாகிறோம் .

நன்றி

கா.முத்துக்குமார்

அன்புள்ள முத்துக்குமார்

உண்மைதான்

தொடர்ந்து சல்லித்தனமான காழ்ப்புணர்வை கொட்டும் ஒரு கும்பலால் என் வாசகர்களாக அமையச்சாத்தியமான ஒரு தரப்பு என்னை இழக்கிறது என எனக்கு தெரியும்

ஆனால் இது என்றும் உள்ள தமிழின் துரதிருஷ்டம். இழப்பு எனக்கில்லை.

அதைமீறி வரும் வாசகர்கள் திடமானவர்கள், நுண்மையானவர்கள். அதுவே போதும்

ஜெ

Dear JM

Started reading “100 Chairs”. Did it with a mild difference – unusually – to take maximum of the story into my head…..!!

I read thru’ the 1st part in my usual speed before shutting down the computer. Today with fresh eyes, though the mind wanted to started with the 2nd part, re-read the first part once again. Really wonderful…

Though belonging to Brahmin community – being in Chennai since birth , I confess that I do not know much about the atrocities that kept (keep ?) happening in the name of casteism and untouchability. The starting episode is so mind blowing that I am beginning to realize the power of the subject aptly being supported by the power of your pen…

As a mark of honor and my gratitude, let me type out my feedback to your story in tamil – AFTER going thru’ the balances of story.

With Love // Suren

Dear sir,

I have been reading your website for some years.The recently published stories are very interesting.Especially the “NOORU NARKALIGAL” was Awesome!
It disturbed me the wholeday.

The story is written in a brilliant manner.very few writers are observing the society like you.I expect more stories and articles in your website so that people like me can have better understanding of the society and its problems in a proper way.

Thank you

Regards
mveerabhadran

kattayanvilai
nagercoil

அன்புள்ள வீரபத்ரன்

கூப்பிடு தூரத்தில் இருக்கிறீர்கள். மின்னஞ்சல் வழி அறிமுகமாகிறோம்))

நன்றி

ஜெ

dear j,
i am radhakrishnan from madurai.yesterday i read nooru narkalikal story all parts in one stroke.i am overwhelmed with deep feelings.i was unable to control my sorrow.
it is very easy to blame brahmins for all the plight of such low cast(supposed to be) people.but i,as a brahmin,today bows my head in shame as our people were in someways
the reason for the creation of the cast ism in the society.kindly tell me ,are brahmins only to be blamed for this?what about other people who took advantage of this and
suppressed others.are they not selfish?they have done atrocities and inflicted untold brutalities on lower people at the cost of microscopic minority brahmins and are continuing the same even today.
as is very well known brahmins are very adaptable and wishes to share all good and bad things with others.even ,love marriages are common nowadays(.inter cast).
.i sincerely want to tell others that we are second to none in doing service to lower people.it is our moral oblication also.
what about rajaji,madurai vaidyanatha iyer and numerous others? reasonable people like you are the only solace for us today’.
there is a fear in my mind whether such stories may evoke more hatred in others against brahmins unnecessarily..please clarify
radhakrishnan,madurai.

அன்புள்ள ராதாகிருஷ்ணன்

இந்த மாதிரி ஒரு ஐயம் குற்றவுணர்ச்சியில் இருந்து வரலாம். சுய பாதுகாப்பு சார்ந்த எச்சரிக்கை உணர்ச்சியில் இருந்து வரலாம். இதற்கு நான் என்ன பதில் சொல்லமுடியும்? பிராமணர்களை வைவார்கள், ஆகவே இதையெல்லாம் எழுதவேண்டாம் என்கிறீர்களா?

சாதிய முறையின் வேர்கள் மேலிருந்து கீழ்நோக்கி கருத்தியலால் செலுத்தப்பட்டவை அல்ல. கீழிருந்து மேல்நோக்கி பழங்குடிவாழ்க்கையின் சடங்குநம்பிக்கைகளில் இருந்து கொண்டுசெல்லப்பட்டவை. இந்தியாவில் இன்றும் உக்கிரமான தீண்டாமையும் சாதியும் வெளியுலகம் அறியா பழங்குடிகளில்தான் உள்ளது.

சாதியமைப்பு மற்றும் தீண்டாமையின் பொறுப்பு எல்லா உயர் சாதிக்கும் சமம். பிறரை குற்றம் சாட்டுபவர்கள் தங்களை மறைக்கவே அதைச் செய்கிறார்கள். அவர்கள் மாறினாலே போது முக்கால்வாசி பிரச்சினை தீர்ந்துவிடும்

ஜெ

முந்தைய கட்டுரைகோணங்கியும் மார்க்ஸும்
அடுத்த கட்டுரைஅறம், சோற்றுக்கணக்கு -கடிதங்கள்