விமர்சனம் என்பது ஒருவகையான அத்துமீறலாக, ஒரு துடுக்குத்தனமாக, யாரோ சிலரை புண்படுத்துக்கூடியக் காரியமாக கருதப்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக விமர்சனம் எழுதக்கூடியவன் நான். ஒவ்வொரு விமர்சனத்திற்குப் பிறகும் ஒரு கருத்து வெளிபடும். ‘நம்ம எதுக்கு மத்தவங்கள புண் படுத்தனும், அவர்கள் வருத்தப்படமட்டார்களா’ என்று. அவர்கள் கதையைப் படித்துவிட்டு அவர்களைவிட அதிகமாக வருத்தமடைந்துதானே நான் என்னுடைய விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். என்னுடைய வருத்தத்தை நீங்கள் கணக்கில் கொள்ளமாட்டீர்களா? என்பேன்.
உரை மீண்டு நிலைத்தவை