புதுவை வெண்முரசு கூடுகை- டிசம்பர் 2019

 

வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதலும் அதன் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது .

 

வெண்முரசு நூல் வரிசையின் அடுத்ததான “நீலம்” நூலை புத்தாண்டில் தொடங்கும் முன்னம் இவ்வாண்டில் நிகழ்ந்து முடிந்த மூன்று நூல்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு முழு நூலுக்குமான சிறப்புரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் மூன்றாவதும் , இறுதி நிகழ்வுமான “முதற்கனல்” மீதான தனது உரையை நண்பர் .மயிலாடுதுறை பிரபு வரும் டிசம்பர் 21 ம் தேதி ( 21-12-2019 ) சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு நிகழ்த்தவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

சிறப்பு அழைப்பாளராக சென்னை வெண்முரசு கூடுகை நிகழ்த்துபவர்களில் ஒருவரும், சத்தியானந்தா யோகா நிலைய குருவுமான அன்பு நண்பர் G.சௌந்தர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க இருக்கிறார். அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும், புதுவை வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம்

 

 

இடம்:

 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

 

தொடர்பிற்கு:-

9943951908 ;9843010306

 

 

Send from my apple iPad

 

Thanking you , With regards,

 

Kirubanidy Arikrishnan.

Pondicherry .605001

Cell : 9843010306

முந்தைய கட்டுரைஎதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 17