புதுவை வெண்முரசு கூடுகை 32

 

வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதலும் அதன் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது .

 

வெண்முரசு நூல் வரிசையின் அடுத்ததான “நீலம்” நூலை புத்தாண்டில் தொடங்கும் முன்னம் இவ்வாண்டின் இனி வரும் மாதங்களில் நிகழ்ந்து முடிந்த மூன்று நூல்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு முழு நூலுக்குமான சிறப்புரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் இரண்டாம் நிகழ்வாக “வண்ணக்கடல்” மீதான தனது உரையை மரியாதைக்குரிய எழுத்தாளர் திரு.வளவ.துரையன் அவர்கள் வரும் நவம்பர் 23 ம் தேதி ( 23-11-2019 ) சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு நிகழ்த்தவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அதன் சிறப்பு அழைப்பாளராக அன்பு நண்பர் திரு .விஜயராகவன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க இருக்கிறார்.

 

அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும், புதுவை வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

தொடர்பிற்கு:-

9943951908 ;9843010306

 

முந்தைய கட்டுரைநீங்களும் புதுக்கவிதை எழுதலாம்
அடுத்த கட்டுரைஇரு சிறுகதைகள்